பேராசியரும், மாணவியும்
சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் லோகேஷ் (26). இவர் அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். அதே கல்லூரியில் அரும்பாகத்தைச் சேர்ந்த 17 வயதான மாணவி முதலாமாண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் லோகேஷும், மாணவியும் நட்பாக பழகி வந்துள்ளார். இருவரும் தங்களது செல்போன் எண்களை பகிர்ந்துகொண்டு கல்லூரி முடிந்து வீட்டுக்கு சென்ற பின்னர் பேசி வந்துள்ளனர்.
தடம் மாறிய பொறுப்பு
ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்க தொடங்கினர். கல்லூரி படிப்பு முடிந்த பின்னர் உன்னையே திருமணம் செய்துகொள்வதாக மாணவியுடன் லோகேஷ் கூறியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், லோகேஷ் மாணவியை தான் வசிக்கும் வில்லிவாக்கம் வீட்டிற்கு அவ்வப்போது அழைத்து வந்துள்ளார். பல நேரங்களில் இருவரும் நெருக்கமாக இருந்து வந்துள்ளனர்.
தமிழக பள்ளிகள் திறப்பு: அமைச்சர் அதிகாரபூர்வ அறிவிப்பு!
கை கழுவிய பேராசிரியர்
இந்நிலையில், சமீப நாட்களாக மாணவியுடன் பழகுவதை லோகேஷ் நிறுத்தியுள்ளார். கல்லூரி நடைபெறாமல் வீட்டில் இருந்து வரும் மாணவி லோகேஷுக்கு பலமுறை செல்போனில் தொடர்பு கொண்ட போதும் அவர் அழைப்பை ஏற்காமல் இருந்துள்ளார். இந்நிலையில், தன்னிடம் எதற்கு பேச மறுக்கிறீர்கள் என மாணவி கேட்டதற்கு, தனது வீட்டில் எனக்கு வேரோரு பெண்ணை நிச்சயித்துள்ளனர். நான் எனது பெற்றோரை மீறி எதுவும் செய்ய முடியாது என கூறிய லோகேஷ் மாணவியுடன் இருந்த உறவை முறித்துக்கொண்டார்.
பாய்ந்தது போக்ஸோ
இதனால் அதிர்ந்து போன மாணவி நடந்தவற்றை தனது வீட்டில் தெரிய படுத்தினார். மகளின் வாழ்க்கையை நாசமாக்கிவிட்டு தப்ப முயன்ற லோகேஷ் மீது அவர்கள் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் பேராசிராயர் லோகேஷை போக்ஸோ வழக்கில் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
யார் செய்த குற்றம்?
மாணவர்களுக்கு நல்வழி காட்டவேண்டிய பேராசிரியரே சிறுமி என்றும்கூட பாராமல் காதல் வலையில் விழவைத்து ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அந்த கல்லூரி நிர்வாகத்திற்கு பேரதிர்ச்சி கொடுத்துள்ளது. பள்ளி படிப்பு முடிந்து கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட மகள், பேராசிரியரின் வலையில் சிக்கி ஏமாற்றப்பட்ட நிகழ்வு மாணவியின் குடும்பத்தை அதைவிட பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.