ஆப்நகரம்

கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் தவறி விழுந்த பள்ளி மாணவன் உயிரிழப்பு!

சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து தவறி விழுந்த மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 8 Jun 2019, 7:53 am
சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து தவறி விழுந்த மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil CMBT


சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து தவறி விழுந்த மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனாம்பேட்டையைச் சேர்ந்த ஸ்ரீவந்த் அருண் என்பவர் சேத்துப்பட்டு பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய அவர் கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடையில் நின்று கொண்டிருந்தார்.

Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (08/06/2019): அலுவலகத்தில் பேரும், புகழும் கிடைக்கும்!

Petrol Price: நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வரும் பெட்ரோல், டீசல் விலை: எப்போ உயரப்போகுதோ?

பயணிகள் பலரும் நின்றிருந்த நிலையில், ஸ்ரீவந்த் அருண் முதலாவது நடைமேடையில் இருந்து கீழே குதித்ததாக கூறப்படுகிறது. இதில், அதிர்ச்சியடைந்த பயணிகள் போலீசாருக்கு தகவல் கொடுக்க சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஸ்ரீவந்த் அருணை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், கொண்டு செல்லும் வழியிலேயே ஸ்ரீவந்த் அருண் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து கே11 சிஎம்பிடி காவல் நிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி