ஆப்நகரம்

பாலியல் கொடுமையால் ஆசிரியை பள்ளியிலேயே தற்கொலை..! திருவாரூரில் அதிர்ச்சி

திருவாரூர் அருகே தனியார் பள்ளி ஆசிரியை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 5 Dec 2021, 7:13 pm
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே மருதுவாஞ்சேரி சிவன் கோயில் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் 35 வயதுடைய சத்யா. இவருக்கு பிரபு என்பவருடன் திருமணமாகி பத்து வருடம் ஆகிய நிலையில், தர்ஷினி என்ற 7 வயது பெண் குழந்தை உள்ளது. தற்போது கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக சத்யா பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.
Samayam Tamil tiruvarur teacher suicide


சத்யா நன்னிலம் அருகே பேரளம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 15 வருடங்களக பணிபுரிந்து வருகிறார். தற்போது தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று மதியம் 12 மணி அளவில் பள்ளியிலேயே விஷமருந்தி உள்ளதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகத்தினர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். சத்யா தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு 2.50 மணி அளவில் இறந்துள்ளார்.

அதனையடுத்து, சத்யாவின் உடல் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்த நிலையில், பேரளம் காவல்துறையினர் சந்தேக மரணம் என பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து சத்யாவின் உறவினர்கள் சரஸ்வதி மற்றும் ஆனந்த் கூறும்போது, 15 வருடமாக சத்யா அதே பள்ளியில் பணியாற்றி வருகிறார். பள்ளியில் தாளாளர் சத்யாவுக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அதனால் சத்யா மன உளைச்சலில் இருந்து வந்த நிலையில், சம்பவத்தன்று சத்யா பள்ளிக்கு சென்றபோது அவரை பள்ளிக்குள் அனுமதிக்கவில்லை என்றும் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினர்.

அடுத்த செய்தி