ஆப்நகரம்

கதுவா வழக்கு: நாங்கள் யாரையும் துன்புறத்தவில்லை: ஜம்மு டிஜிபி

கதுவா வழக்கு விசாரணையின் போது சித்தரவதையில் ஈடுபடவில்லை என ஜம்மு-காஷ்மீர் காவல்துறை டிஜிபி தில்பாக் சிங் நேற்று ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 24 Oct 2019, 9:31 am
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவாவில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 8 வயது சிறுமி திடீரென காணாமல் போனார். இதுதொடர்பான விசாரணையில் அவர் சடலமாக மீட்கப்பட்டார். மேலும் அங்கிருந்த கோவிலில் 4 நாட்கள் அடைத்து வைக்கப்பட்டு, கும்பல் ஒன்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்தது கண்டறியப்பட்டது.
Samayam Tamil Untitled collage (2)


அவரது உடல் பிரேத பரிசோதனையில், மயக்க மாத்திரை கொடுத்து, பாலியல் வன்கொடுமை செய்து, கல்லால் அடித்துக் கொல்லப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். அதில், 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற 3 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கத்வா சிறுமி பாலியல் படுகொலை வழக்கு; குற்றவாளிகள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை!

இவ்வழக்கை விசாரிக்கும் சிறப்புப் புலனாய்வுக் குழுவைச் ( எஸ்ஐடி) சேர்ந்த உறுப்பினர்கள் சித்திரவதையில் ஈடுபட்டனர் என்பது கண்கூடாகத் தெரிகிறது என்பதால், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று ஜம்மு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 22) உத்தரவிட்டது.

இந்நிலையில் சித்திரவதை ஏதும் நடைபெறவில்லை என்றும் இவ்வழக்கை விசாரிக்கும் சிறப்புப் புலனாய்வுக் குழு உறுப்பினர்கள் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு பின்பற்றப்படும் என்றும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறை டிஜிபி தில்பாக் சிங் தெரிவித்தார்.

ஜம்மு -காஷ்மீரில் வீடு, மனை வாங்க விரும்புவோரின் கவனத்துக்கு...

ஸ்ரீநகரில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அனைத்து முதல் தகவல் அறிக்கைகளுமே உண்மைத் தகவல்களின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டியதில்லை. சில நேரங்களில் அதற்கு ஓர் நோக்கம், உள்நோக்கம், நீதிமன்ற உத்தரவு ஆகியவையும் காரணமாக இருக்கின்றன. நாங்கள் ஆயிரக்கணக்கான வழக்குகளை விசாரிக்கிறோம். ஆண்டுதோறும் 17,000 வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. அதற்காக விசாரணை என்ற பெயரில் நாங்கள் அப்பாவி மக்களை பிடித்துச் சென்று துன்புறுத்துவதாக அர்த்தம் இல்லை” என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி