ஆப்நகரம்

நாசம் பண்ணிட்டாங்கப்பா... படிக்க படிக்க கண்ணீர்... மகளை இழந்த அப்பாவின் குமுறல்..!

வேலூர் நர்சிங் மாணவி தற்கொலைக்கு முன் எதிர்கொண்ட தொல்லை குறித்து மாணவியின் தந்தை கூறிய அதிர்ச்சி தகவல்

Samayam Tamil 16 Aug 2022, 5:50 pm
வேலூர் மாவட்டம் குடியாத்தம், காமாட்சி அம்மன் பேட்டை பகுதியை சேர்ந்தவர் குமரேசன். இவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். மகள் கார்த்திகாதேவி (22) ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள அப்போல்லோ நர்சிங் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு மாணவியின் பெற்றோருக்கு போன் செய்த கல்லூரி நிர்வாகம், உங்கள் மகளுக்கு உடல்நிலை சரியில்லை... வந்து அவரை அழைத்து செல்லுங்கள் என தகவல் கூறியுள்ளனர்.
Samayam Tamil vellore student death case


இதனால் பதறிப்போன குமரேசன் தன்னுடைய மகன் கோகுலவாசனை அனுப்பி மகளை வேலூருக்கு அழைத்து வந்துள்ளார். அன்று இரவு முழுவதும் கடும் மன சோகத்தில் இருந்த கார்திகாதேவி அழுதுகொண்டே இருந்துள்ளார். அவரை பெற்றோர் தேற்றிதங்களுடைய பக்கத்திலேயே படுக்க வைத்துள்ளனர். அதிகாலையில் எழுந்து பார்த்தபோது படுக்கையில் மகள் இல்லை என்று. வீட்டுக்குள் குமரசேனும் இரண்டு மகன்களும் தேடி பார்த்தபோது ஜிம் அறை கதவு உள்பக்கமாக பூட்டியிருந்தது. அதை உடைத்து உள்ளே சென்ற பார்க்கையில், மகள் தூக்கில் பிணமாக தொங்கிக்கிடந்துள்ளார்.

பதறிப்போய் கதறி அழுத குடும்பத்தினர் கார்திகாதேவியை கீழே இறக்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்ததில் மாணவி ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து மாணவியின் தந்தை குடியாத்தம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், எனது மகள் தங்க செயின் போட்டு இருந்தது கண்டித்து கல்லூரி பேராசிரியை சக மாணவிகள் முன்பு திட்டியுள்ளார். 'படிக்க வந்தாயா இல்ல சீன் போட வந்தாயா' என கேட்டு அவமான படுத்தியுள்ளார். நான்காம் ஆண்டில் பெயில் ஆக்கிவிடுவோம் படிப்பை முடிக்க முடியாது என மிரட்டியுள்ளனர். எனது மகளை கண்டாலே அவர்களுக்கு ஆகாது... எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

'துணைக்கு யாருமே இல்ல'... 27 வயதான பெண் தற்கொலை... மகள்கள் அனாதையான சோகம்

இது குறித்து மாணவியின் தந்தை குமரேசன் கூறுகையில், அந்த கல்லூரி முதல்வரும் ஒரு பெண்தான்... எனது மகள் மீது உயிரையே வைத்திருந்தேன்... சம்பவம் அன்று இரவு எவ்வளவோ மகளை தேற்றினோம்... இந்த கல்லூரி இல்லைனா என்ன, இன்னொரு கல்லூரியில் படிக்க வைக்கிறேன் என்று கூட சொன்னேன்.. அதற்கு, இல்லப்பா என் படிப்பையே நாசம் பண்ணிட்டாங்கன்னு சொல்லி அழுதா... கடைசியில் எதையும் கேட்காமல் இப்படி செய்துவிட்டாள்'' என மாணவியின் தந்தை குமரேசன் குமுறினார்.

அடுத்த செய்தி