ஆப்நகரம்

பொங்கல் போட்டியில் ஏற்பட்ட மோதல்: சிவகங்கையில் வாலிபர் படுகொலை..!

சிவகங்கை அருகே பொங்கல் விழாவின்போது ஏற்பட்ட மோதலில் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 18 Jan 2022, 7:21 pm
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் அமைந்துள்ள இலந்தைகுளம் கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிராமத்தின் பள்ளி எதிரே விளையாட்டு போட்டிகள் நடந்துள்ளன.
Samayam Tamil சிவகங்கை கொலை


இதே கிராமத்தை சேர்ந்த சிவானந்தம் விளையாட்டுப் போட்டிகளைப் பற்றி மைக் செட்டில் பேசியுள்ளார். அப்போது இந்த கிராமத்தைச் சேர்ந்த ,கார்த்திகேயன் கருப்புசாமி ,அருண்குமார், மூன்று பேரும் மைக்கில் பேசக்கூடாது என்று சிவானந்தத்தை எச்சரித்துள்ளனர். இதனால் சிவனாந்தம் தரப்பினருக்கும் கார்த்தி தரப்பினருக்கும் வாக்குவாதம் நடந்துள்ளது. பின்னர் ஊர்மக்கள் சார்பாக சமாதானம் பேசி முடித்துள்ளனர்.


இருப்பினும், ஆத்திரம் தீராத சிவனாந்த தரப்பினர், இந்த சன்டையில் அதிகமாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட கருப்புசாமி மற்றும் அருண் குமாரைவீட்டிற்கு செல்லும் வழியில் வழிமறித்து விலங்குகளை வேட்டையாட பயன்படுத்தும் சுலுக்கு கத்தியை வைத்து இருவரையும் தாக்கியுள்ளனர். இதில் கருப்புசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.

19 வயது டிப்ளமோ மாணவி தற்கொலை: காரணத்தால் உறைந்துபோன குடும்பம்

மேலும், அருண்குமார் பலத்த காயத்துடன் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இலந்தைகுளத்தை சேர்ந்த சிவா, சிவானந்தம், கண்ணன், ராஜ்குமார், சரத்குமார் ,ஆகிய 5 நபர்களையும் திருப்புவனம் காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்

பொங்கல் பண்டிகையின்போது நடந்த இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி