ஆப்நகரம்

ஆபாச பேச்சுக்கு யூடியூபில் கொட்டிய பணம்... பப்ஜி மதனின் வங்கி கணக்குகள் ஆய்வு..!

பப்ஜி மதன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 17 Jun 2021, 2:37 pm
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரின் மகனான பப்ஜி மதன் யூடியூபில் ஆபாசமாக பேசியே பல லட்ச ரூபாய்க்கு அதிபதியாகியுள்ள சம்பவம் கேட்போருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பப்ஜி விளையாட்டில் உள்ள நுணுக்கங்களை பற்றி பல லட்ச பயனாளர்களுக்கு லைவ் ஸ்ட்ரீமிங் மூலம் தெரிவித்து வந்த பப்ஜி மதன் ஆபாச வார்த்தைகளை பேசி வந்ததன் காரணமாக சென்னை க்ரைம் போலீசார் அதுகுறித்து விசாரிக்க சம்மன் அனுப்பியிருந்தனர்.
Samayam Tamil pubg madan wife


ஆனால், பப்ஜி மதன் விசாரனைக்கு வரவில்லை. இதனிடையே அவரை கைது செய்து விசாரிக்கவும், அவரது
TOXIC MADAN 18+ என்ற சேனலை தடை செய்யவும் யூடியூப் நிறுவனத்துக்கு போலீசார் கடிதம் அனுப்பினர். தொடர்ந்து சென்னை, பெங்களூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் தேடுதல் வேட்டையை நடத்தினர். ஆனால், இதுவரை அவர் போலீசில் சிக்காமல் தலைமறைவாகி வருகிறார். இதனிடையே, பப்ஜி மதனின் வீடியோக்களை யூடியூபில் அப்லோடு செய்ததாக அவரது இளம் மனைவி கிருத்திகாவை போலீசார் நேற்று கைது செய்தனர்.

மனைவி கைது செய்யப்பட்டதையடுத்து பப்ஜி மதன் சரண் அடைய முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், பப்ஜி மதனுக்கு முன்ஜாமீன் கோரி அவரது வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், பப்ஜி மதனின் பதிவேற்றப்பட்ட வீடியோக்கள் ஆபாசமாக உள்ளது என்று காட்டமாகா தெரிவித்தனர்.


சென்னை அழைத்து வரப்பட்ட சிவசங்கர் பாபா... போலீசின் அடுத்த அதிரடி 'மூவ்' என்ன?

மேலும், மதனின் ஆபாச வார்த்தைகளை காத்து கொடுத்து கேட்கமுடியவில்லை என்றும் அவரது வார்த்தைகளை காது கொடுத்து கேட்டுவிட்டு நாளை வருமாறு வழக்கறிஞருக்கு அறிவுறுத்திய நீதிபதிகள் வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தனர். இந்நிலையில், பப்ஜி மதன் யூடியூப் வீடியோக்களில் ஆபாசமாக பேசி லட்ச கணக்கில் பணம் சம்பாதித்துள்ளது தெரிய வந்துள்ளது. யூடியூப் சேனல் மூலமாகவும், அவரது சப்ஸ்கிரைபர்கள் மூலம் பேடிஎம் உள்ளிட்ட செயலிகளில் பண பரிவர்த்தனை மூலமாக அவரை சம்பாதித்த பணத்தை பங்குச்சந்தை மற்றும் பிட்காயினில் முதலீடு செய்துள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, பப்ஜி மதனின் வங்கிக் கணக்குகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் பப்ஜி மதனை போன்ற ஆபாச யூடியூபர்களுக்கு எச்சரிக்கை மணியை அடித்துள்ளது. ஏற்கனவே தனது மனைவி போலீசாரின் விசாரணையில் சிக்கியுள்ளதால் பப்ஜி மதன் விரைவில் கைது செய்யப்படுவார் அல்லது சரண் அடைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சிறுமிகளிடம் ஆபாச வார்த்தைகளை பேசியதன் காரணமாக மதன் மீது மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டலாம் எனவும் போலீசார் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி