ஆப்நகரம்

ரவுடி ரஜினி வெடிகுண்டு வீசிக் கொலை!

புதுச்சேரி, ரவுடி அன்பு ரஜினியை வெடிகுண்டு வீசியும், கத்தி, அரிவாளால் தாக்கியும் மர்ம கும்பல் ஒன்று நேற்றுக் கொலை செய்தது.

Samayam Tamil 11 Nov 2019, 8:27 am
சமீப நாட்களாகத் தமிழ்நாடு, புதுச்சேரியில் துப்பாக்கி வெடிகுண்டு தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதற்கு ஆதாரமாகத் தொடர்ந்து பல்வேறு குற்றச் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், புதுச்சேரி பிரபல ரவுடி ஒருவரை வெடிகுண்டு வீசியும் கத்தி, அரிவாளால் வெட்டியும் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil Untitled


புதுச்சேரியைச் சேர்ந்தவர் அன்பு ரஜினி. பிரபல ரவுடி. இவர் மீது கொலை, கொள்ளை உள்பட பல்வேறு வழக்குகள் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் உள்ள காவல் நிலையங்களில் பதிவாகியுள்ளது.

ரவுடி, அன்பு ரஜினிக்கும் அப்பகுதியில் உள்ள பிர ரவுடிகளுக்கும் அவ்வப்போது பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. சமீப நாட்களாக இவர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், பல்வேறு தாக்குதல் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

மாநிலத்தை உலுக்கிய சாதிய கொலை வழக்குக் குற்றவாளிகளை விடுத்தலைச் செய்த அதிமுக அரசு!

இந்நிலையில், அன்பு ரஜினி புதுச்சேரி முத்தியால் பேட்டை பகுதியில் நேற்று இரவு 9:30 மணியளவில் தனது காரில் சென்று கொண்டிருந்தபோது, மர்ம கும்பல் ஒன்று வெடிகுண்டு வீசியுள்ளது.

தாக்குதலைச் சற்றும் எதிர்பாராத அன்பு ரஜினி, பதற்றத்தில் தனது காரை வழியிலே நிறுத்தியுள்ளார். அப்போது வெடிகுண்டு வீசிய மர்ம கும்பல், ரஜினி தப்பிக்காமலிருக்கக் காரை சுற்றி வலையம் அமைத்துள்ளனர்.

இதற்கிடையில், காரிலிருந்து இரங்கித் தப்ப முயன்ற ரஜினி, கொலை செய்ய வந்த கும்பலிடம் சிக்கிக் கொண்டார். ரஜினியைக் கொலை செய்ய வந்த கும்பல், அவரை சரமாரியாகக் கத்தி, அரிவாளால் கொடூரமாகத் தாக்கியுள்ளது.

திருமண வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை; மிள்காய் பொடி தூவி நூதனம்

இதில் நிலை தடுமாறிப்போன ரஜினி, சம்பவ இடத்திலே ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே சரிந்தார். சம்பவம் குறித்து அறிந்த முத்தியால்பேட்டை காவல்துறையினர், கொலை நடந்த இடத்து விரைந்தனர்.

சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துறையினர் ரவுடி ரஜினியின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காகப் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், சம்பவம் குறித்துக் கண்காணிப்பு கேமராக் காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி