ஆப்நகரம்

ராகுல் காந்திக்கு லத்தியடி, கைது? பரபரப்பில் ஹத்ரஸ் மாவட்டம்..!

உபியில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தாரை சந்திக்க சென்ற ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதாக தகவல்

Samayam Tamil 1 Oct 2020, 3:42 pm
உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ரஸ் மாவட்டத்தில் 19 வயதான இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பூதாகரமாக வெடித்துள்ளது. குற்றவாளிகளை தூக்கிலிடவும், போலீசாரின் அடாவடியை எதிர்த்தும் இளம்பெண்ணின் உறவினர்கள், பொதுமக்கள், மாணவர்கள் என பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Samayam Tamil rahul gandhi at hathras


முன்னெச்சரிக்கையாக ஹத்ரஸ் மாவட்டத்தில் வெளியாட்கள் நுழையாதவாறும், உள்ளூர் மக்கள் வெளியில் சுற்றத்தவாறும் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கூட்டு பாலியல் வன்கொடுமை ஆளாக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்திக்க சென்றபோது ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் தடுத்து நிறுத்தபட்டனர்.


யமுனா நெடுஞ்சாலையில் நடைபயணமாக சென்ற ராகுல், பிரியங்கா மற்றும் காங்கிரஸார் போலீசார் தடுத்து நிறுத்தப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் போலீசார் தன்னை கீழே தள்ளிவிட்டு அடித்ததாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி