ஆப்நகரம்

ஓடும் ரயிலில் பாத்ரூமுக்கு சென்ற பயணிக்கு அதிர்ச்சி... போலீசாரின் விபரீத முடிவு..!

மும்பையில் இருந்து சென்னை சென்று கொண்டிருந்த ரயிலில் ரயில்வே காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 31 Jan 2020, 5:29 pm
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள எர்ரகுண்டா ரயில்வே காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் பன்வர்.
Samayam Tamil ஓடும் ரயிலில் பாத்ரூமுக்கு சென்ற பயணிக்கு அதிர்ச்சி


இந்தநிலையில் இன்று காலை எர்ரகுண்டாவில் இருந்து சென்னை சென்று கொண்டிருந்த ரயிலில் பாதுகாப்பு பணியில் இருந்தார். அப்போது ரயில் கடப்பாவை அடுத்த ஓண்டிமிட்டா ரயில் நிலையத்திற்கு வந்தபோது பன்வர் திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியால் தனது மார்பில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.


'காடை பிரியாணி' ரேட்டுங்க... சுட்டுக் குவிக்கப்படும் காக்கைகள்... அசைவ பிரியர்கள் ஜாக்கிரதை!

சத்தம் கேட்டு அங்கு வந்து பார்த்த பயணிகள் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த போலீசார் ரத்தவெள்ளத்தில் கிடந்த அவரை கீழே இறக்கி பார்த்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

நிர்பயா குற்றவாளிகள் உயிருடன் இருக்கப் போகும் கடைசி நாள்- சொன்னபடி தூக்குல போட்ருவாங்களா?

இதனையடுத்து அவரது உடலை கடப்பா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் ரயிலில் பயணம் செய்த பயணிகள் அச்சத்தில் பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த கடப்பா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி