ஆப்நகரம்

இராமநாதபுரம்: குழந்தைகளை தவிக்கவிட்டு தோழியுடன் மாயமான பெண், போலீஸ் வலைவீச்சு!

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே தோழியுடன் இளம்பெண் மாயமானதைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Samayam Tamil 16 Oct 2019, 11:38 am
ஆண், பெண் இருபாலரும் திருமணத்துக்கு வெளியே உறவு கொள்ளும்போது அதனால் ஏற்படும் பிரச்சினைகளில் உடனடியாக பாதிக்கப்படுவது அவர்களது குழந்தைகள்தான். திருவாடனையில் நடைபெற்றுள்ள சம்பவத்திலும் இரு குழந்தைகள் தனது தாயை தேடி தவிக்கின்றனர்.
Samayam Tamil Untitled collage (23)


இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தொண்டி காந்தியார் வீதியைச் சேர்ந்தவர் மணிவேல். இவருடைய மனைவி சுகன்யா வயது 27. இவர்களுக்கு கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். தற்சமயம் தொழில் காரணமாக சுகன்யாவின் கணவர் மணிவேல் கோவையில் எலெக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார்.

இதனால் சுகன்யா, குழந்தைகள் வீட்டில் தனியாக இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சுகன்யாவிற்கு அவரது வீட்டிற்கு அருகில் வாடகைக்கு குடியிருந்த சினேகா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதை சுகன்யாவின் கணவர் மணிவேல் கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த சுகன்யா நேற்று (அக்டோபர் 15) தனது குழந்தைகளை வீட்டில் தனியாக விட்டு விட்டு அவரது தோழி சினேகாவுடன் மாயமாகி விட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சுகன்யாவின் கணவர் மணிவேல் தொண்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து தோழியுடன் மாயமான இளம்பெண் சுகன்யாவை தேடி வருகின்றனர். சுகன்யாவின் இரு குழந்தைகளும் தாயை காணாததால் தவித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி