ஆப்நகரம்

வயலில் செத்து மடிந்த மயில்கள்... வனத்துறையினர் அதிர்ச்சி.! விவசாயி கைது...

ராமநாதபுரம் அருகே வயலை நாசம் செய்வதாக மயில்களுக்கு விஷம் வைத்து கொன்ற விவாசாயியை வனத்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Samayam Tamil 30 Dec 2019, 4:33 pm
ராமநாதபுரம் அருகே முதுனாள் கிராமப் பகுதியில் 20 க்கும் மேற்பட்ட தேசிய பறவையான மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறை அதிகாரிகள் முதுநாள் கிராமத்தில் விசாரணை நடத்தினர்.
Samayam Tamil வயலில் செத்து மடிந்த மயில்கள் வனத்துறையினர் அதிர்ச்சி விவசாயி கைது


அப்போது தனது நிலத்தில் விலைக்கப்பட்டுள்ள நெல் சாகுபடிக்கு மயில்கள் தொந்தரவு செய்து வந்ததால், அப்பகுதியைச் சேந்த கோபி (52) என்ற விவசாயி, அரிசி மற்றும் நெல்லுடன் குருணை மருந்து கலந்து மயில்களுக்கு வைத்ததாக கூறப்படுகிறது.

இதனால் வழக்கம்போல விளை நிலத்தையும் வந்திருந்த மயில்கள் விஷம் கலந்த இரையை தின்றதால் 20க்கும் மேற்பட்ட மயில்கள் அனைத்தும் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது. அவற்றை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்குப்பிறகு வனத்துறையினர் உதவியோடு ஒதுக்குப்புறமான இடத்தில் அனைத்து மயில்களையும் ஒரே இடத்தில் புதைத்தனர்.

பாத்திமா லத்தீஃப் தற்கொலை, என்ன செய்யப் போகிறது சிபிஐ?

இதனையடுத்து கேணிக்கரை போலீசார் கோபி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள வன பகுதிகளில் மயில்களை வேட்டையாடுபவர்கள் மீது வனத்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


பொதுவாக கறி மற்றும் தோகைக்காக மயில்கள் வேட்டையாடப்படுகிறது. பெரும்பாலும் ஆண் மயில்களின் ஒரு கொத்து தோகை வெளிநாடுகளில் இந்திய மதிப்பின்படி 700 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதனுடைய கறியிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் மருத்துவ குணம் வாய்ந்ததாக கருதியும் மயில்கள் கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி