ஆப்நகரம்

நிஜத்தில் நடந்த ’நான் அவனில்லை’; 4 சின்ன வீட்டை சமாளித்த கசமுசா நாயகன்!

தொழிலதிபர் என்று கூறி 4 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த நபரைப் போலீசார் கைது செய்தனர்.

Samayam Tamil 26 Jul 2019, 5:24 pm
ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கோட்டை ராஜு. இவரது மகள் கோமலாதேவி. இவர் மாடக்கொட்டான் பகுதியை சேர்ந்த துபாயில் இருந்து திரும்பி வந்திருந்த கங்காதரனை, கடந்த 2008ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்.
Samayam Tamil Women Cheating


இதையடுத்து தனது மனைவியின் நகை, குடும்பத்தினரின் பணத்தைக் கொண்டு சார்ஜாவில் ”Man Power” என்ற பெயரில் தனியார் நிறுவன வேலைக்கு ஆட்களை அனுப்பும் செயலில் ஈடுபட்டுள்ளார். அப்போது தனது அல்-தரன் என்று மாற்றம் செய்துள்ளார்.

அவரது தொழிலில் நல்ல வருமானம் கிடைத்துள்ளது. இதையடுத்து மனைவியை துபாய்க்கு அழைத்துச் சென்று தங்க வைத்துள்ளார். அங்கு கங்காதரன் நடவடிக்கை மீது கோமலாதேவிக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

எச்சரித்தும் திருந்தாத கணவன்: தலையில் கல்லை போட்டு கொன்ற மனைவி!

மனைவிக்கு தெரியாமல் இரவு நேரத்தில் பப்பில் நடன அழகிகள் உடன் நெருக்கமாக இருந்துள்ளார். இதுபற்றி விசாரித்த போது, அவர் உண்மையை கூறவில்லை. சில நாட்கள் கழித்து, ராமநாதபுரத்திற்கு அழைத்து வந்து கோமலாதேவியை விட்டுச் சென்றுள்ளார்.

இதையடுத்து கங்காதரன் மீண்டும் இந்தியாவிற்கு வந்துள்ளார். அப்போது கோமலாதேவியுடன் தங்கியிருந்த நிலையில், நள்ளிரவில் கங்காதரன் செல்போனும் மிஸ்டு கால் வந்துள்ளது. இதைக் கண்ட கோமலா தேவி, சம்பந்தப்பட்ட நம்பருக்கு அழைத்துள்ளார்.

இங்கு தான் அதிர்ச்சி ஆரம்பித்தது. செல்போனில் பேசிய கவிதா என்ற பெண், தான் கங்காதரன் மனைவி என்று, தற்போது கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார். இவர் சின்னசேலம் பகுதியில் வசித்து வருகிறார்.

முன்னாள் மேயர் கொலை: காவல் துறை திணறல்; சிபிசிஐடி ஆய்வு

இதுபற்றி கங்காதரனிடம் கேள்வி எழுப்பினால், அவர் கவிதா யார் என்றே தெரியவில்லை என பதிலளித்துள்ளார். பின்னர் கங்காதரனுக்கு தெரியாமல், அவரது செல்போனை கோமலாதேவி ஆராய்ந்துள்ளார். அதில் யமுனா என்ற பெண்ணை திருமணம் செய்திருப்பதும் தெரியவந்தது.

இதுதொடர்பான புகைப்படங்கள், வாட்ஸ் அப் உரையாடலை கண்டு அதிர்ந்தார். உடனே போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கு விசாரணை சில நாட்கள் நடைபெற்று வந்துள்ளது.

இதற்கிடையில் தான் திருந்தி விட்டதாக கூறி, கோமலாதேவியை நம்ப வைத்துள்ளார். மேலும் தன் பெயரில் இருந்த நிறுவனத்தை கோமலாதேவி பெயருக்கு மாற்றி எழுதி வைத்துள்ளார். இவற்றை எல்லாம் நம்பி, மீண்டும் ஒன்றாக வாழ ஆரம்பித்துள்ளனர்.

சோழிங்கநல்லூரில் காரில் வந்து பைக் திருடும் ஹைடெக் திருடர்களுக்கு வலைவீச்சு!

ஆனால் வேதாளம் மீண்டும் முருக மரம் ஏறியுள்ளது. அதாவது, சென்னையை சேர்ந்த தீபா என்ற பெண்ணை நான்காவது திருமணம் செய்து, பெண் குழந்தை இருப்பது தெரியவந்தது.

இதனால் பேரதிர்ச்சி அடைந்த கோமலா தேவி, ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர்கள் கங்காதரனைக் கைது செய்து, தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

அடுத்த செய்தி