ஆப்நகரம்

இந்த கடையில பஜ்ஜி, போண்டா வாங்குனா அதார் கார்ட் ஜெராக்ஸ்லதான் கொடுப்போம்...

ராமநாதபுரத்தில் உள்ள ஒரு டீக்கடையில் பஜ்ஜி, போண்டா மடித்துத் தருவதற்கு ரேஷன் கார்ட், ஆதார் கார்ட் உள்ளிட்ட அட்டைகளின் நகல்களைக் கொண்டு மடித்து வழங்கப்படுகிறது...

Samayam Tamil 23 Nov 2019, 6:16 pm
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆதார் கார்ட் நகல்களைக் கொண்டு பஜ்ஜி போண்டாக்களை மடித்துக் கொடுக்கும் டீ கடை ஒன்று இயங்கி வருகிறது.
Samayam Tamil ramanathapuram tea shopramanathapuramramanathapuram tea shop aadhar
இந்த கடையில பஜ்ஜி, போண்டா வாங்குனா அதார் கார்ட் ஜெராக்ஸ்லதான் கொடுப்போம்...


ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகம்மது காசிம் அப்பா தெருவில் டீக்கடை ஒன்று உள்ளது. ஊரில் சற்று பிரபலமான டீக்கடை என்றே கூறலாம்.

மரணத்தின் பாதையாக மாறிய டிக் டாக்... தமிழகத்தில் தொடரும் சோகங்கள்...

இந்த கடையில் நாம் சென்று பஜ்ஜி போண்டா வாங்கினால், சாதரண பேப்பரிலோ, நியூஸ் பேப்பரிலோ அவை வைத்துக் கொடுக்கப்பட மாட்டாது. ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு உள்ளிட்டவற்றின் நகல்களைக் கொண்ட பேப்பர்களில்தான் வழங்கப்படும். அது பார்சல் என்றாலும் சரி, கடையில் வைத்தே சாப்பிடுகிறோம் என்றாலும் சரி. வேறுபாடே இல்லை

உண்மையில் டீக்கடைக் காரரின் இந்த செயல் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது என்றே கூற வேண்டும். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அந்த ஊரைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக் என்பவர், சம்பந்தப்பட்ட டீக்கடைக்கு சென்று போண்டா கேட்டுள்ளார்.

காணாமல் போய் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்துள்ள அதிசய பூனை... அமெரிக்காவில் நிகழ்ந்துள்ள அற்புதம்!!

அப்போது கடைக்காரர் போண்டாவை ஒரு ஆதார் கார்ட் நகலை கொண்ட பேப்பரில் வைத்துக் கொடுத்துள்ளார். அந்த பேப்பரிலிருந்த முகம் தன்னுடையது போலவே இருக்கிறதே என்ற சந்தேகத்தில் சித்திக் உற்று அதைப் பார்த்தார். அந்த ஆதார் கார்ட் நகல் சித்திக்குடையது.

தனது ஆதார் அட்டை நகலை வட்டாட்சியர் அலுவலகத்தில் கொடுத்திருந்த நிலையில் அந்த பேப்பர் இங்கு வந்ததை உணர்ந்துக் கொண்டார். இப்படிதான், இந்த டீக்கடைக்கு போண்டா மடித்துக் கொடுக்க பேப்பர்கள் வருகின்றது என்பதை உணர்ந்த அந்த டீக்கடை வாடிக்கையாளர்கள், அதிகாரிகள் என்ன செய்கிறார்கள் மக்களின் அடையாள அட்டைகளின் நகல்களைக் கொண்டு என்பதை விசாரிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.

அடுத்த செய்தி