ஆப்நகரம்

''ஜூஸில் விஷம்''... கேரள சம்பவத்தை போல சென்னையில் அதிர்ச்சி..? இன்ஸ்டா காதலனின் சோக முடிவு..!

சென்னை சிறுமியை காதகித்து வந்த ராமநாதபுரம் இளைஞர் ஜூஸில் விஷம் கலந்து குடித்து இறந்துபோன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Authored byதிவாகர் மேத்யூ | Samayam Tamil 17 Apr 2023, 3:24 pm
ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் சஞ்சீவ் (18). இவர் இன்ஸ்டாகிராமில் சென்னையை சேர்ந்த 16 வயது சிறுமியை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துள்ளார். அந்த சிறுமியும் சஞ்சீவை உருகி உருகி காதலித்து வருகிறார். இந்த நிலையில், பல மாதங்களுக்கு முன்பு காதலியை சந்திக்க சென்னைக்கு வந்த சஞ்சீவ் சிறுமியுடன் பல்வேறு இடங்களுக்கு சுற்றி திரிந்துள்ளார்.
Samayam Tamil juice death


அதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் சஞ்சீவ் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் பேரில் சஞ்சீவ் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டார். பின்னர் வெளியில் வந்த சஞ்சீவ் மீண்டும் காதலியுடன் பேசி வந்துள்ளார். இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு காதலியை பார்க்க சென்னைக்கு வந்த சஞ்சீவ் சிறுமியுடன் பல இடங்களில் சுற்றி திரிந்துவிட்டு ஊருக்கு செல்வதற்காக கோயம்பேடு பஸ் நிலையத்தில் காத்துக்கொண்டிருந்தார்.

அப்போது காதலனை வழி அனுப்புவதற்காக அங்கு வந்திருந்த சிறுமி சஞ்சீவுக்கு கூல் டிரிங்க் வாங்கி கொடுத்துள்ளார். இதற்கிடையே, விஷயம் அறிந்து சிறுமியின் பெற்றோர் கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு வந்து சஞ்சீவை சரமாரியாக அடித்துவிட்டு சிறுமியை வீட்டுக்கு அழைத்து சென்றனர்.

இதனை அடுத்து, கூல் ட்ரிங் குடித்த சில மணி நேரத்துக்கு பிறகு சஞ்சீவுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு உடல்நலம் மோசமாகியுள்ளது. விஷயம் அறிந்து வந்த சஞ்சீவின் பெற்றோர் அவரை ஆம்புலன்சில் ஏற்றி செல்லும் வழிலேயே பரிதாபமாக இறந்துள்ளார்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஏற்கனவே சிறுமியின் பெற்றோர் தன்னை சிறைக்கு அனுப்பி வைத்ததை போல இந்த முறையும் அனுப்பிவிட கூடாது என பயந்து கூல் ட்ரிங்கில் விஷம் கலந்து மயக்கமானதாக தெரிய வந்தது. ஆனால், கடைசியில் அந்த முடிவு இளைஞரின் உயிரையே பறித்துவிட்டது.

இதேபோல கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக - கேரள எல்லை பகுதியான பாறசாலை சேர்ந்த வாலிபர் ஷாரோன் ராஜ் காதலியால் விஷம் கொடுக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாட்டை உலுக்கியது. அதாவது, கன்னியாகுமரியைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவருக்கும் கிரீஷ்மாவுக்கும் கடந்த ஆண்டு மார்ச் 4-ம் தேதி நிச்சயமானது. இதனால் ஷாரோன் ராஜை கழட்டிவிட கிரீஷ்மா முயன்றுள்ளார். ஆனால், ஷாரோன் ராஜ் காதலியை விட்டுக்கொடுக்க சம்மதிக்கவில்லை. மேலும், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கிரீஷ்மாவை தொடர்ந்து வற்புறுத்தி வந்தார். இதனால் குடிக்கும் ஜூஸில் விஷம் கலந்து பல நாட்களாக திட்டமிட்டு காதலனை தீர்த்துக்கட்டினார் கிரீஷ்மா. இந்த நிலையில்,
இந்த சம்பவமும் அதே பாணியில் நடந்ததா என்பதை குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எழுத்தாளர் பற்றி
திவாகர் மேத்யூ
திவாகர். நான் தொலைக்காட்சி, நியூஸ் ஆப், செய்தி இணைதளம் என ஊடக துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருகிறேன். எழுத்தின் மீதான ஆர்வமும் ஊடகத்தின் மீது இருக்கும் பற்றால் இத்துறையை தேர்வு செய்துள்ளேன். அரசியல், குற்றம், அரசியல் - குற்றம் சார்ந்த அலசல், அரசு சார்ந்த செய்திகளை எவ்வித சமரசமும் இல்லாமல் எழுதி வருகிறேன். கடந்த 3 ஆண்டுகளாக TIMES Of INDIA சமயம் தமிழில் Senoir Digital Content Producer ஆக பணியாற்றுகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி