ஆப்நகரம்

கேஸ் ரிப்பேர் செய்ய வந்தவரால் சோகம், சிலிண்டர் வெடித்து 4 பேர் கவலைக்கிடம்!

சிலிண்டரில் ஏற்பட்டிருந்த பழுதை நீக்கியபோது சிலிண்டர் வெடித்ததில் 4 பேர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Samayam Tamil 29 Jan 2020, 7:58 pm
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த புலிவலம் கிராமத்தில் நடராஜன் கன்னியம்மாள் அவர்களின் வீட்டில் சிலிண்டர் அடுப்பு பழுது ஆகியுள்ளது. அப்போது தெருவில் இருசக்கர வாகனத்தில் சிலிண்டர் அடுப்பு பழுது நீக்கம் செய்பவர் ஒருவர் வந்திருக்கிறார்.
Samayam Tamil Untitled


அவரை வைத்து சிலிண்டரில் ஏற்பட்ட பழுதை சரிசெய்ய முயன்றபோது, அந்த சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி நான்கு பேர் படுகாயமடைந்து வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை பகுதியில் உள்ள நடராஜன் என்பவர் வீட்டிலிருந்த சிலிண்டரில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அதை சரி செய்ய ஒருவரை நடராஜன் தேடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் காஸ் ஸ்ட்வ் சரிசெய்யும் காளியப்பன் என்பவரை சந்தித்துள்ளார்.

பாஜக பிரமுகர் கொலை, தீண்டாமை கொடுமை என வழக்குப் பதிவு

இதையடுத்து, காளியப்பனை தனது வீட்டுக்கு நடராஜன் அழைத்து சென்றுள்ளார். காளியப்பன் சிலிண்டரை சரி செய்துக் கொண்டிருந்தபோது, நடராஜன் மனைவி அண்ணி அம்மாள் அருகே நின்றுக் கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.


இந்த விபத்து காரணமாக நடராஜனின் விடு முற்றிலும் சேதமடைந்துள்ளது. இந்த விபத்து காரணமாக நடராஜன் வீட்டருகேயிருந்த அரசு உயர் நிலையப் பள்ளியின் சுற்று சுவர் இடிந்து விழுந்தது. இந்த சுவர் இடிந்து விழுந்ததில் பள்ளி வளாகத்திலிருந்த அரசு ஆசிரியர் முல்லை காயமடைந்துள்ளார்.

திருப்பூர் 'டைம்ஸ் ஆப் இந்தியா' நிருபர் சாலை விபத்தில் பலி..!

இதையடுத்து காயம்டைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த கொடூர விபத்தால் 3 பேருக்கு பலத்தை தீக் காயங்கள் ஏற்பட்டுள்ளது. ஆசிரியர் ஒருவர் சுவர் சரிந்த இடிபாடுகளில் சிக்கி காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்திற்கு சிலிண்டரை சரி செய்த காளியப்பன்தான் காரணம் எனக் கூறப்படுகிறது. எனினும் தொடர்ந்து விசாரணையில்தான் இந்த விபத்து தொடர்பான பின்னணி தெரியவரும்.

அடுத்த செய்தி