ஆப்நகரம்

மற்றுமொரு அதிர்ச்சி.! பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இளம்பெண் எரித்து கொலை.!?

மேற்கு வங்காளத்தில் உள்ள மாந்தோப்பில் எரிக்கப்பட்ட நிலையில் இளம்பெண்ணின் சடலத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

Samayam Tamil 7 Dec 2019, 2:30 pm
ஹைதராபாத் பெண் மருத்துவரை கூட்டு பலாத்காரம் செய்து எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவை அதிர செய்தது. அப்பெண் எரிக்கப்பட்ட அதே இடத்தில் வைத்து குற்றவாளிகள் நான்கு பேரையும் போலீசார் சுட்டு கொலை செய்த சம்பவம் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Samayam Tamil மற்றுமொரு அதிர்ச்சி.! பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இளம்பெண் எரித்து கொலை.!?


இந்த நிலையில் மேற்கு வங்காளத்தில் 20 வயது பெண்ணின் சடலத்தை எரிந்த நிலையில் போலீசார் கைப்பற்றியுள்ளனர். மால்டா மாவட்டம் இங்கிலீஷ் பஸார் அருகே உள்ள மாந்தோப்பில் எரிந்த நிலையில் சடலம் இருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் பஸார் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அங்கு விரைந்த போலீசார் சடலத்தை சோதனையிட்டதில் அது 20 வயது தக்க இளம்பெண் என்று தெரிந்தது. இது குறித்து போலீசார் மாந்தோப்பினை ஒட்டியுள்ள பகுதி மக்களை விசாரித்தனர். அதில் சிலர் '' 3 நாட்களுக்கு முன்பு இங்கு அலறல் சத்தம் ஒன்று கேட்டது. ஆனால் அங்கு சென்று பார்த்ததில் யாரும் காணப்படவில்லை என்று கூறினர்.

இந்த சம்பவத்தை குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு கூறுகையில், பெண்ணின் உடல் முழுவதுமாக எரிந்துள்ளதால் அவரை குறித்து எந்த அடையாளமும் எங்களுக்கு தெளிவாக தெரியவில்லை. அவருடைய அந்தரங்க பகுதிகளில் காயங்கள் உள்ளன.

கரூர்: மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்த மருத்துவர்கள்!

இதனால் அவர் எரிக்கப்படுவதற்கு முன்பாக பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம். சம்பவ இடத்தில் இருந்து செருப்புகளையும், வத்தி குச்சிகளையும் கைப்பற்றியுள்ளோம். பிரேத பரிசோதனை முடிவு வந்த பிறகே பெண்ணின் மரணத்தை குறித்து தெரிய வரும் என கூறினார்.

தெலங்கானா என்கவுண்டர் நடந்த கதை!

கொலை சம்பவத்தை குறித்த வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உன்னாவ், ஹைதராபாத் சம்பவங்களை அடுத்து மேற்கு வங்காளம் நிகழ்வு மேலும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அடுத்த செய்தி