ஆப்நகரம்

ரேப் வழக்கில் வெளிவந்த காமுகன், குடிசைக்குள் இருந்த சிறுமி கொடூர கொலை!

மகாராஷ்டிராவில் பலாத்காரம் வழக்கில் கைதாகி பரோலில் வெளிவந்த நபர் சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்து கைதாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 31 Dec 2020, 8:49 pm
மஹாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தின் பென் பகுதியைச் சேர்ந்த 3 வயதான சிறுமி கடந்த டிசம்பர் 30 அன்று இரவு தனது குடிசையில் குடும்பத்துடன் உறங்கியுள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் சிறுமியின் வாயை மூடி அருகிலுள்ள காட்டு பகுதிக்கு கொண்டு சென்றுள்ளார்.
Samayam Tamil file pic


பின்னர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு சிறுமியை கொலை செய்துள்ளார். இதையடுத்து, சிறுமியின் சடலத்தை அவரது குடிசையின் அருகே வைத்துவிட்டு செல்லும்போது சிறுமியின் பாட்டியிடம் சிக்கியுள்ளார்.

உடனே அவர் கூச்சலிட்டதால் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பினார். இதையடுத்து, சிறுமியின் சடலத்தை பார்த்து கதறி அழுத குடும்பத்தார் உடனே ராய்காட் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

டியூட்டி நேரத்தில் கணவனுடன் பெண் காவலர் செய்த வேலை..! நெல்லையில் பரபரப்பு

புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் அதே பகுதியில் பதுங்கியிருந்த மர்ம நபரை நான்கு மணி நேரத்தில் பிடித்து கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், அந்த நபர் பெயர் ஆதேஷ் பாட்டில் (35) என்பதும் அவர் ஏற்கனவே ரேப் வழக்கில் கைதாகி பின்னர் பரோலில் வெளியில் வந்ததும் தெரிய வந்தது.

இச்சம்பவத்தை அடுத்து பென் பகுதி கிராம மக்கள் அனைவரும் அப்பகுதியில் போராட்டம் நடத்தினர். கைதான ஆதேஷ் பாட்டில் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரி ஊர் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பட்டு ஏற்பட்டது.

அடுத்த செய்தி