திருப்பதி பாக்ராபேட்டை வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்தி வந்த திருவண்ணாமலை மாவட்டம் போளூரை சேர்ந்த ஒருவரை ஆந்திர செம்மர கடத்தல் தடுப்பு போலீசார் கைது செய்துள்ளனர்.
வனப்பகுதிக்குள் தோளில் சுமத்தப்படியே 19 செம்மரக் கட்டைகளோடு விரட்டி சென்றதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த ரோந்து நடத்தப்பட்டுள்ளது.
திருப்பதி செம்மர கடத்தல் பிரிவு போலீசாரும் வனத்துறையினரும் இணைந்து தலகோணா வனப்பகுதியில் ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது 20க்கும் மேற்பட்ட ஒரு கூட்டம், செம்மரக் கட்டைகளைத் தோளில் சுமந்தபடி வந்ததாக போலீசார் கூறுகின்றனர்.
போலீசாரை கண்டதும் அந்த கும்பல், செம்மரக் கட்டைகளை அதே இடத்தில் போட்டுவிட்டுத் தப்பி ஓடிவிட்டனர் என்கிறார்கள். அவர்களைத் துரத்திச் சென்றதில் திருவண்ணாமலை மாவட்ட போளூரை சேர்ந்த சேகர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கஞ்சா பூமியான தலைநகர், 2 மாதத்தில் மட்டும் 132பேர் கைது!
சேகரிடம் செம்மர கடத்தல் தடுப்பு போலீசார் நடத்திய விசாரணையில், தான் செம்மரத்தை வெட்டி கடத்திக் கொண்டு சென்றதாகவும் 10 நாட்களுக்குள் இப்படிக் கடத்தி செல்வது 2வது முறை என்றும் சேகர் கூறியுள்ளார்.
சேகர் இந்த செம்மரங்களை ஒரு மாதத்திற்கு முன்பே வனப்பகுதிக்குள் சென்று செம்மரங்களை வெட்டி வைத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாகக் கடத்தி சென்று வந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தப்பி ஓடியவர்கள் குறித்தும், இந்த கடத்தல் நெட்வொர்க் குறித்தும் சேகரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வனப்பகுதிக்குள் தோளில் சுமத்தப்படியே 19 செம்மரக் கட்டைகளோடு விரட்டி சென்றதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த ரோந்து நடத்தப்பட்டுள்ளது.
திருப்பதி செம்மர கடத்தல் பிரிவு போலீசாரும் வனத்துறையினரும் இணைந்து தலகோணா வனப்பகுதியில் ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது 20க்கும் மேற்பட்ட ஒரு கூட்டம், செம்மரக் கட்டைகளைத் தோளில் சுமந்தபடி வந்ததாக போலீசார் கூறுகின்றனர்.
போலீசாரை கண்டதும் அந்த கும்பல், செம்மரக் கட்டைகளை அதே இடத்தில் போட்டுவிட்டுத் தப்பி ஓடிவிட்டனர் என்கிறார்கள். அவர்களைத் துரத்திச் சென்றதில் திருவண்ணாமலை மாவட்ட போளூரை சேர்ந்த சேகர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கஞ்சா பூமியான தலைநகர், 2 மாதத்தில் மட்டும் 132பேர் கைது!
சேகரிடம் செம்மர கடத்தல் தடுப்பு போலீசார் நடத்திய விசாரணையில், தான் செம்மரத்தை வெட்டி கடத்திக் கொண்டு சென்றதாகவும் 10 நாட்களுக்குள் இப்படிக் கடத்தி செல்வது 2வது முறை என்றும் சேகர் கூறியுள்ளார்.
சேகர் இந்த செம்மரங்களை ஒரு மாதத்திற்கு முன்பே வனப்பகுதிக்குள் சென்று செம்மரங்களை வெட்டி வைத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாகக் கடத்தி சென்று வந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தப்பி ஓடியவர்கள் குறித்தும், இந்த கடத்தல் நெட்வொர்க் குறித்தும் சேகரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.