ஆப்நகரம்

குன்னுர் டூ கோவை வரை ராணுவ வீரர்களின் உடல்கள்: வழியில் திக் திக் நிமிடங்கள்..!

கோவை சூலூர் விமானப் படை தளத்தில் இருந்து குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்துக்கு கொண்டுவரப்பட்ட பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 12 பேர் உடல்கள்

Samayam Tamil 9 Dec 2021, 4:25 pm
இந்தியாவின் முதல் முப்படை தளபதி உட்பட 14 பேர் பயணித்த ஹெலிகாப்டர் நேற்று காட்டேரி பார்க் என்ற இடத்தில் மேக மூட்டத்தில் சிக்கி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 14 வீரர்களில் 13 பேர் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை தெரிவித்திருந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Samayam Tamil TamilNadu Chopper Crash


அதனை தொடர்ந்து விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு இன்று காலை வெலிங்டன் பயிற்சி கல்லூரி மைதானத்தில் ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது.

அதன்பின் தமிழக அரசின் அமரர் ஊர்தியில் தனித்தனியாக உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல்கள் போலீஸ் பாதுகாப்புடன் கோவை சூலூரில் உள்ள விமானப்படை பயிற்சி மையத்திற்கு சாலை மார்க்கமாக கொண்டு வரப்பட்டன.

வரும் வழியில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் கொண்டுவரப்பட்ட அமரர் ஊர்தி மேட்டுப்பாளையம் அருகே திடீரென விபத்துக்குள்ளாகியது. பின்னர் மற்றொரு வாகனத்தில் உடல் மாற்றப்பட்டு கொண்டுவரப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ராணுவ வீரர்களின் பாதுகாப்பிற்கு வந்த போலீஸ் வாகனம் விபத்துக்குள்ளாகியது.

பின்னர் போக்குவரத்து சரி செய்த பின் ராணுவ வீரர்களின் உடல்கள் சூலூர் விமானப்படை தளத்திற்கு 2.55 மணி அளவில் கொண்டு வரப்பட்டன. சாலை வழியாக கொண்டுவரப்பட்ட உடலுக்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டு மலர்தூவி அஞ்சலி செய்தனர்.

'வேணும் முட்டாய் வேணும்'... அடம் பிடித்த அரசு பேருந்து ஓட்டுநர்... என்ன காரணம்?

இதன் பின்னர், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடல்கள் சூலூர் விமானபப்டை விமான தளத்தில் இருந்து சி-130 ஜே சூப்பர் ஹெர்குலிஸ் விமானத்தில் டெல்லி கிளம்பியது.

அடுத்த செய்தி