ஆப்நகரம்

ராஜபாளையம்: வேன், கார் நேருக்கு நேர் மோதி விபத்து!

ராஜபாளையம் அருகே நடைபெற்ற கோர விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்தில் பலியாகினர்.

Samayam Tamil 28 Jan 2020, 12:51 pm
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே தென்காசி சாலையில் மதுரையிலிருந்து குற்றலாம் நோக்கி சென்ற வேனும், குற்றாலத்தில் இருந்து இராஜபாளையம் நோக்கி வந்த காரும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
Samayam Tamil ராஜபாளையம்: வேன், கார் நேருக்கு நேர் மோதி விபத்து


கொரோனா வைரஸ்: தலைநகரில் முதல் பலி!

இரவு நேரத்தில் நடைபெற்ற இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து ஆம்புலன்ஸ் வாகனங்களுடன் தீயணைப்பு துறையினரும், காவல் துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். உருக்குலைந்த காருக்குள் இருந்து அதில் சிக்கியவர்களை போராடி வெளியே கொண்டுவந்தனர்.

சிறுமி வயிற்றில் அரை கிலோ தலை முடி, ஷாம்பு பாக்கெட்கள்- ஆபரேஷனில் பயங்கர ‘ஷாக்’!

இதில் காரில் பயணம் செய்த சிவகாசி பகுதியை சேர்ந்த அந்தோணிராஜ், சுடலைமணி, கண்ணன் உட்பட 4 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். மேலும் பிரபு என்பவர் படுகாயங்களுடன் மீட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் இடிபாடுகளில் சிக்கிய கார் ஓட்டுநரை பல கட்ட முயற்சிக்குப் பின் தீயணைப்பு துறையினர் வெளியே கொண்டு வந்தனர்.

அத்துமீறிய டோல்கேட்; முரட்டு தாக்குதல் நடத்திய ஊழியர்கள்- ஷாக்கான பொதுமக்கள்!

மேலும் வேனில் பயணம் செய்த 20 பேர் லேசான காயங்களுடன் இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

காவல் துறையினர் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரவு நேரத்தில் நடைபெற்ற கோர விபத்து அந்தப் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி