ஆப்நகரம்

சென்னையில் பட்டப்பகலில் அதிர்ச்சி; ஆயுதங்களுடன் இளைஞரை துரத்திச் சென்ற கும்பல்!

ஆயுதங்களுடன் இருசக்கர வாகனத்தில் துரத்திச் சென்ற இருவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

TIMESOFINDIA.COM 7 May 2019, 3:51 pm
சென்னை அண்ணா நகர் அருகே உள்ள ஷாப்பிங் மாலில் பிரவீன்(23) வேலை செய்து வருகிறார். இவர் பாடியில் உள்ள சிவசக்தி நகரைச் சேர்ந்தவர். கடந்த சனிக்கிழமை அன்று, வேலை முடித்து விட்டு, வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
Samayam Tamil Chennai Attack


அப்போது எதிரே வந்த சதீஷ், பிரவீன் பைக்கில் இடித்துள்ளார். இதையடுத்து இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. உடனே தனது நண்பர்களை சதீஷ் எச்சரிக்கை செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மூன்று பேர் கொண்ட கும்பல், அங்கு விரைந்துள்ளது. உடனே அவர்கள் பிரவீனை சூழ்ந்து கொண்டனர். அவர்கள் தனது பைக்கை விட்டு விட்டு, அங்கிருந்து ஓடியுள்ளார்.

அவரைப் பின் தொடர்ந்து கும்பல் சென்றுள்ளது. அவர்கள் தங்கள் கைகளில் பயங்கர ஆயுதங்களை வைத்துள்ளனர். இந்நிலையில் அழுதுகொண்டே திருமங்கலம் பேட்ரோல் போலீசாரிடம் தஞ்சமடைந்துள்ளார்.

அவர்கள் விசாரணை மேற்கொண்டு, சிசிடிவி காட்சிகள் உதவியுடன் சதீஷ் மற்றும் அசோக்கை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

அடுத்த செய்தி