ஆப்நகரம்

கவரிங் நகைக்கும் தங்க நகைக்கும் வித்தியாசம் தெரியாத அப்பாவி திருடர்கள்..!

சேலம் அருகே பட்டப்பகலில் கவரிங் நகை என தெரியாமல் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகைகளை கொள்ளை அடித்து சென்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Samayam Tamil 14 Nov 2019, 8:11 pm
சூரமங்கலம் அருகே பட்டப்பகலில் கவரிங் நகை என தெரியாமல் ரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் இருந்து நகையை பறித்துச் சென்ற இரு வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Samayam Tamil கவரிங் நகைக்கும் தங்க நகைக்கும் வித்தியாசம் தெரியாத அப்பாவி திருடர்கள்..!


சென்னை: பலமுறை மிரட்டி பாலியல் வன்புணர்வு.. இளம்பெண் புகார் அளித்தும் காவல் துறை அலட்சியம்..

சுரமங்கலம் நெடுஞ்சாலை பகுதியை சேர்ந்தவர் செல்வகுமாரி. இவர் அப்பகுதியில் உள்ள கடைக்கு சென்று வீடு திரும்பியுள்ளார் அந்த நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர் செல்வகுமாரியின் அருகில் சென்று அவர் கழுத்தில் அணிந்திருந்த நகையை பறித்துச் சென்றுள்ளனர்.

ஓசி சோறுக்கு ஆசைபட்டு 4 லட்சத்தை இழந்த சோகம்!

பின்னர் இது குறித்து சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்த செல்வகுமாரி கொள்ளை கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் கவரிங் எனவும் தெரிவித்தார். இதனையடுத்து புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் நகை பறிப்பு நடந்த பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து தப்பி சென்ற கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி