ஆப்நகரம்

வேலூரில் திருட வந்த வீட்டில் சமைத்து சாப்பிட்ட கொள்ளையர்கள்!

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் திருட வந்த இடத்தில் பசி எடுதத்ததால், சமையலறைக்கு சென்ற திருடர்கள் சமைத்து சாப்பிட்டு ஹாயாக கொள்ளையடித்து விட்டு தப்பியோடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

Samayam Tamil 5 Sep 2019, 11:39 am
வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே திருட வந்த வீட்டில் கொள்ளையர்கள் சமைத்து சாப்பிட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil vel


வேலுார் மாவட்டம், வாணியம்பாடி, சென்னாம்பேட்டை தக்கடி தெருவில் வசிப்பவர் பாரூக் (50), தோல் தொழிற்சாலை உரிமையாளர். இவர் தனது உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக கடந்த 1-ம் தேதி குடும்பத்துடன் பெங்களூரு சென்றார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை பாரூக் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்ததை பார்த்த, அவரது உறவினர்கள், உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, நகைகள் திருடு போனது தெரிந்தது.

சென்னையில் இப்படியுமா நடக்குது? பள்ளி குழந்தைகளுக்கு கஞ்சா விற்ற தாய், மகன்!

இதுகுறித்து தகவலறிந்த டிஎஸ்பி பாலகிருஷ்ணன், காவல்ஆய்வாளர் சந்திரசேகர் தலைமையிலான சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் வீட்டினுள் நிறுத்தி வைத்திருந்த டூவிலர், டிவி மற்றும் வீட்டு உபயோகப் பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

மேலும் திருட வந்த இடத்தில் பசி எடுதத்ததால், சமையலறைக்கு சென்ற திருடர்கள் சாப்பிட ஏதாவது இருக்கிறதா எனத் தேடியுள்ளனர். பின்னர் அங்கு டப்பாக்களில் வைத்திருந்த சேமியாவையும், மக்ரூனியையும் வேகவைத்து மிளகாய் பொடியை தூவி சமைத்து சாப்பிட்டு மீதத்தை அப்படியே வைத்துவிட்டு தப்பியோடினர்.

தூங்கிக்கொண்டிருந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..! மர்மநபர் மீது போலீசார் வலை வீச்சு..

கொள்ளையடிக்க வந்த இடத்தில் திருடர்கள் சமைத்து சாப்பிட்ட சம்பவம் வாணியம்பாடி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருட முயன்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இதேபோல திருப்பத்தூர் ஆசிரியர் நகரைச் சேர்ந்தவர் பசுபதி (65), மளிகைக்கடை உரிமையாளர். இவர் தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக கடந்த 1-ம் தேதி இரவு, குடும்பத்துடன் வெளியூர் சென்றார். பின்னர் மீண்டும் வீட்டுக்கு திரும்பியபோது, வீட்டின் கதவை உடைத்து, மர்மநபர்கள் உள்ளே புகுந்தது தெரியவந்தது.

11 வயது சிறுமி பலமுறை பாலியல் வன்புணர்வு.! 16 வயது சிறுவன் போக்ஸோவில் கைது.!!

ஆனால் வீட்டில் நகை, பணம் எதுவும் இல்லாததால், சமையலறைக்கு சென்று திருடர்கள், ஃபிரிட்ஜ்-ல் இருந்த, மீன்களை எடுத்து, குழம்பு வைத்து சமைத்து சாப்பிட்டுள்ளனர். எனவே இந்த இரு கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே கும்பலாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

அடுத்த செய்தி