ஆப்நகரம்

கோவை லாட்டரி அதிபர் மார்ட்டின் சகோதரர் வீட்டில் நடந்தது என்ன? நடு இரவில் திக்திக்

கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டின் சகோதரரை கட்டிப்போட்டு 30 சவரன் நகை மற்றும் 45 ஆயிரம் பணத்தை மர்மகும்பல் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 19 May 2020, 4:23 pm
கோவை ஜி.என்.மில்ஸ் அடுத்த உருமாண்டம்பாளையம் ராகவேந்திரா காலனி பகுதியில் லாட்டரி அதிபர் மார்ட்டின் சகோதரர் வேதமுத்து தனது மனைவி செபஸ்தியுடன் வசித்து வருகிறார். வீட்டு வேலைக்காக அருள்மேரி என்ற பணி பெண்ணும் அங்கு இருக்கிறார்.
Samayam Tamil கோவை லாட்டரி அதிபர் மார்ட்டின் சகோதரர் வீட்டில் கொள்ளை


இந்நிலையில், நேற்று இரவு 1 மணியளவில் வீட்டின் மதில்சுவரை தாண்டி குதித்த 5 பேர் கொண்ட கொள்ளை கும்பல் வீட்டின் முன்புற கதவை இரும்பு கம்பி கொண்டு உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். உள்ளே புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த வேலைக்கார பெண் அருள்மேரி மற்றும் மார்ட்டின் சகோதரர் வேதமுத்து அவரது மனைவி செபஸ்தி ஆகியோரை கட்டிபோட்டுள்ளனர்.

பின்னர், பீரோவைத் திறந்து அதில் இருந்த 30 சவரன் நகை மற்றும் 45 ஆயிரம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதையடுத்து அவர்களாகவே ஒருவருக்கொருவர் கைகளை அவிழ்த்து துடியலூர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துடியலூர் காவல்துறையினர் மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் துணை காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை நடத்தினர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கணவனுக்கு பிறகு மச்சனன், அதன் பிறகு வேறொருவர்... கடைசியில் போன உயிர்...

கொள்ளையர்களில் 4 பேர் இந்தியில் பேசி உள்ளதால் வட மாநிலத்தவரின் கைவரிசையை என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லாட்டரி அதிபர் மார்ட்டின் சகோதரரை கட்டிப்போட்டு கொள்ளையடித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி