ஆப்நகரம்

திருமண வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை; மிள்காய் பொடி தூவி நூதனம்

திருமண வீட்டில் நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்

Samayam Tamil 10 Nov 2019, 6:30 pm
வேலூர்: வாலாஜாப்பேட்டை அருகே திருமண வீட்டின் கதவை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil கொள்ளையடிக்கப்பட்ட வீடு
கொள்ளையடிக்கப்பட்ட வீடு


வேலூர் மாவட்டம் வாலாஜாப்பேட்டை அருகே கிராமணி கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். பீடி மண்டி நடத்தி வரும் இவரது மூத்த மகள் பவித்ராவின் திருமணம் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் இன்று காலை நடைபெற்றது. இதற்காக நேற்று மாலை ஆரணிக்கு குடும்பத்துடன் சென்ற சரவணன், திருமணம் முடிந்து இன்று வீடு திரும்பியுள்ளார்.

நூதன திருட்டு முயற்சி... மைதா மாவு கொள்ளையர்கள் அட்டகாசம்...

அப்போது வீட்டின் பின்கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த சரவணன், வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 100 சவரன் மற்றும் ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போனது தெரியவந்துள்ளது.

இது குறித்து வாலாஜாப்பேட்டை காவல்துறையினருக்கு சரவணன் அளித்த புகாரின் அடிப்படையில், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

டிக் டாக் செய்து வந்த மனைவியைக் கழுத்தை நெரித்து கொலை செய்த கணவர்...

கொள்ள போன வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவப்பட்டிருப்பதால் மோப்ப நாய்களின் பிடியில் சிக்காமல் இருக்கும் பொருட்டு கொள்ளையர்கள் இதனை செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. திருமண வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி