ஆப்நகரம்

உறுதிமொழி அளித்த ரவுடி மீண்டும் கைது!

திருச்சி நீதிமன்றத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட மாட்டேன் என உறுதிமொழியை கொடுத்த ரவுடி மீண்டும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Samayam Tamil 28 Oct 2021, 11:19 pm
திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் பொறுப்பேற்றது முதல் திருச்சி மாநகரத்தில் குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் பல்வேறு அதிரடி முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
Samayam Tamil குலாம் தஸ்தகிர்
குலாம் தஸ்தகிர்


இந்நிலையில் திருச்சி மாநகரம், அரியமங்கலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட, ரவுடி பட்டியலில் இருக்கும் அரியமங்கலம் ரவுடி குலாம் தஸ்தகிர் (32 ), கடந்த ஆண்டு நிர்வாக செயல்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகி பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க மாட்டேன், குற்றச்செயல்களில் ஈடுபடமாட்டேன் என்ற நன்னடத்தை உறுதிமொழி பிரமாண பத்திரத்தை வழங்கியிருந்தார்.

ஆனால் தற்போது ரவுடி குலாம் தஸ்தகீர், நன்னடத்தை பிரமாண பத்திரத்தை மீறி வழிப்பறி மற்றும் பொது சொத்திற்கு பங்கம் விளைவித்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டதாக அவர் மீது அரியமங்கலம் காவல் நிலையத்தில் கடந்த 19ஆம் தேதி வழக்குகள் பதிவு செய்தனர்.
தீபாவளி காரணமாக தருமபுரியை பிக் பிஸ் ஸ்டைலில் பார்க்க தொடங்கிய போலீஸ்!
மேலும் ரவுடி குலாம்தஸ்தகீர் உடனடியாக கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கடுமையான சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர ஆணையர் கார்த்திகேயன் எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி