ஆப்நகரம்

சத்துவாச்சாரி அருகே ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை!

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி அருகே, ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 21 Apr 2019, 11:36 am
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி அருகே, ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil சத்துவாச்சாரி அருகே ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை!
சத்துவாச்சாரி அருகே ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை!


வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி விஜயராகவபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (37). இவர் சத்துவாச்சாரி அருகே சென்று கொண்டிருந்தபோது ஒரு கும்பல் ஓடஓட விரட்டி வெட்டியது. இதில் செல்வராஜ் உயிரை காப்பாற்றிகொள்ள அருகிலிருந்த ஆவின் குளிரூட்டு நிலையத்தின் உள்ளே ஓடினார். ஆனால் அந்த கும்பல் விடாமல் அலுவலகம் உள்ளேயும் புகுந்து செல்வராஜின் கை, கால், தலை போன்ற இடங்களில் சரமாரியாக வெட்டி தப்பியது.

இதில் செல்வராஜ் ரத்தவெள்ளத்தில் சரிந்தார். இந்நிலையில் அங்கிருந்தவர்கள் செல்வராஜை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் படுகாயமடைந்த செல்வராஜ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து சத்துவாச்சாரி காவல்துறையினர், செல்வராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குபதிவு செய்து,கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

செல்வராஜ் மீது கொலை வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. தேசிய நெடுஞ்சாலையிலேயே மக்கள் கண் எதிரே ஓட ஓட ரவுடி வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி