ஆப்நகரம்

நண்பனை அடித்தவர்களை தட்டி கேட்ட ரவுடி... கடத்தி சென்று கொன்ற கும்பல்.. சென்னை அருகே பயங்கரம்

சென்னை அம்பத்தூர் அருகே நண்பனை அடித்தவர்களை தட்டி கேட்ட வாலிபரை வெட்டி படுகொலை செய்து கும்பல்

Samayam Tamil 29 May 2022, 3:43 pm
சென்னை அம்பத்தூர் பகுதி சூரப்பட்டுவைச் சேர்ந்தவர் உதயகுமார் (30). இவர் மீது காவல் நிலையத்தில் குற்ற வழக்குகள் உள்ளன. உதயகுமார் அப்பகுதியில் ரவுடியாக சுற்றி வந்துள்ளார். மேலும், இவருக்கு திருமணமாகி வேப்பம்பட்டில் உள்ள தனது மாமியார் வீட்டில் வசித்து வந்தார். அம்பத்தூரை அடுத்த சண்முகபுரம் பகுதியில் உதயகுமாரின் நெருங்கிய நண்பர் ஜீவா (26) என்பவர் வசித்து வருகிறார்.
Samayam Tamil ambathur murder


இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த மோசஸ் (35) என்பவர் தனது நண்பர்களுடன் மது குடித்து சத்தம் போட்டு பேசிக்கொண்டிருந்ததை ஜீவா கண்டித்துள்ளார். அப்போது ஜீவை மோசஸ் அடித்து தாக்கியுள்ளார். இதனை அடுத்து ஜீவா அம்பத்தூர் காவல் நிலையத்தில் மோசஸ் மீது புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் அறிந்த ஜீவாவின் நண்பர் உதயகுமார் மோசஸை தட்டி கேட்க அவரது வீட்டுக்கு சென்றுள்ளார்.

அப்போது மோசஸ் இல்லை. மோசஸின் தாயாரிடம் உதயகுமார் ரகளை செய்துவிட்டு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மோசஸ் தனது நண்பர்களுடன் சென்று உதயகுமாரை வலுக்கட்டாயமாக பைக்கில் ஏற்றிக்கொண்டு சண்முகபுரம் பகுதியில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு கொண்டு சென்றனர். அதன் பின்னர் உதயகுமாரை அரிவாளால் வெட்டியுள்ளனர்.

கடை முன்பு போன் பேசிய பெண்ணை பசங்க கண்முன்னே தாக்கிய பார்லர் ஓனர்... பதைபதைக்கும் வீடியோ

அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடமுயன்ற உதயகுமாரை துரத்தி சென்று சரமாரியாக மோசஸ் கும்பல் வெட்டியுள்ளது. இதனால் படுகாயமடைந்த உதயகுமார் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அப்புன் (35), திமுங்க பிரமுகரின் மகன் சரண் (19), மாணிக்கம் (24), முகுந்தன் (21), சாமுவேல் (20), வினோத் (40) பிராங்கிளின் (23), ராமமூர்த்தி (19) மற்றும் மோரிஸ் (19) ஆகிய 9 பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். வழக்கின் முக்கிய குற்றவாளியான மோசஸை தீவிரமாக தேடி வருகின்றனர்.

கணவன் உதயகுமாரை இழந்த மனைவி கை குழந்தையின் பரிதவித்துள்ள சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி