ஆப்நகரம்

கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட ரவுடி..! நண்பர்கள் தப்பியோட்டம்.. ராமநாதபுரத்தில் பரபரப்பு..!

பரமக்குடியில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு ஜெயிலிலிருந்து வெளிவந்த ரவுடி கார்த்திக் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 7 Feb 2020, 2:07 pm
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள தண்ட்ரா தேவி பட்டினத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். வழிப்பறி வழக்கில் சிறைக்கு சென்று சில நாட்களுக்கு முன்பு வெளியே வந்துள்ளார். இந்த நிலையில் இவர் நேற்று மாலை தனது நண்பர்களுடன் மது அருந்துவதற்காக சென்றுள்ளார். பின்னர் மதுவை வாங்கிக்கொண்டு அருகில் உள்ள கருவேல மரத்தின் அடியில் அமர்ந்து மது அருந்தி உள்ளனர். அதன் பிறகு கார்த்திக் வீடு திரும்பவில்லை என தெரிகிறது.
Samayam Tamil ராமநாதபுரத்தில் ரவுடி கல்லால் அடித்துக் கொலை


இதையடுத்து இன்று காலை அவ்வழியே சென்ற நபர் ஒருவர், தலை சிதைந்து இறந்து கிடந்த கார்த்திக்கின் உடலை பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கார்த்திக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.


ரூ.1.50 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்; இருவர் கைது

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தெரிவிக்கையில், '' கொலை செய்யப்பட்ட கார்த்திக் மீது திருட்டு மற்றும் வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது. ஒரு வழக்கில் சிறை சென்று தற்போது வெளியே வந்து தனது நண்பருடன் நேற்று மாலை மது அருந்த சென்றுள்ளார்.

சென்ற இடத்தில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு அவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் அவருடன் மது அருந்தியவர்களை தீவிரமாக தேடி வருகிறோம் என்றும் அவர்கள் பிடிபட்ட பிறகே உண்மை நிலையை கண்டறிய முடியும் '' என்றும் கூறினர். மேலும் சம்பவ இடத்திற்கு தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி