ஆப்நகரம்

செங்கல்பட்டில் பிரபல ரவுடி பலி... விபத்தா? திட்டமிட்ட கொலையா? போலீஸ் விசாரணை

செங்கல்பட்டு மாவட்டத்தில் பிரபல ரவுடி விபத்தில் பலி; விபத்தா அல்லது திட்டமிட்ட கொலையா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Samayam Tamil 2 Jul 2022, 4:44 pm
செங்கல்பட்டு மாவட்டம் தட்டான் மலைத்தெருவை சேர்ந்தவர் உசேன்பாஷா. இவர் மீது செங்கல்பட்டு தாலுகா மற்றும் நகர காவல் நிலையங்களில் மூன்று கொலை உட்பட பல வழக்குகள் உள்ளன.
Samayam Tamil chengalpattu news


இந்நிலையில், உசேன் பாஷா செங்கல்பட்டு பலவேலி அருகே சாலை விபத்தில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார்.

தகவலின் அடிப்படையில் செங்கல்பட்டு தாலுகா காவல்துறையினர் சம்பவ இடத்திற்க்கு சென்று பார்த்த போது உசேன்பாஷா ரத்த வெள்ளத்துடன் இடுப்பில் பட்டாகத்தியுடன் இறந்து கிடந்ததை கண்ட காவல்துறையினர் அவர் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்துக்கு முற்றுப்புள்ளி? அடுத்த சொத்துக்கள் முடக்கம்

உசேன் பாஷா விபத்தில் தான் இறந்தாரா அல்லது வேறொரு பகை காரணமாக கொல்லப்பட்டாரா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி