ஆப்நகரம்

இவ்வளவு கொடூரமான கொலையா? மதுரையில் பிரபல ரவுடிக்கு நேர்ந்த சோகம்!

மதுரையில் முன்விரோதம் காரணமாக ரயில் நிலையம் அருகே பிரபல ரவுடி கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

Samayam Tamil 28 Apr 2019, 10:21 pm
மதுரை எம்எம்சி காலணி பகுதியை சேர்ந்தவர் சதீஷ் என்ற பிள்ளையார் சதீஷ்(28). இவர் மீது கஞ்சா, கொள்ளை, திருட்டு, வழிப்பறி உட்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன.

இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் நண்பர்களுடன் மது அருந்த அனுப்பானடிக்குச் சென்றுள்ளார். அங்குள்ள ரயில்வே கேட் அருகே, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் மது அருந்தியுள்ளார்.

அங்கு வந்த மர்ம கும்பல் சதீஷை சரமாரியாக வெட்டிச் சாய்த்தனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்தில் மதுரை மாநகர சட்ட ஒழுங்கு துணை ஆணையர் சசிமோகன் ஆய்வு செய்தார். இதுகுறித்து அவனியாபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மதுரையில் பட்டப்பகலில் ரயில் நிலையம் அருகே ரவுடியை மர்ம கும்பல் கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி