ஆப்நகரம்

துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் அடுத்த திருப்பம்; தேனி நீதிமன்றத்தில் ரவுடி செல்வம் சரண்!

பாலிடெக்னிக் மாணவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பமாக ரவுடி செல்வம் தேனி நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். இந்த வழக்கு அடுத்தக் கட்டத்தை எட்டியுள்ளது.

Samayam Tamil 12 Nov 2019, 11:13 am

ஹைலைட்ஸ்:

  • பாலிடெக்னிக் மாணவர் கொல்லப்பட்ட பின்னணி
  • ரவுடி செல்வம் நீதிமன்றத்தில் சரண்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Gun Firing
தமிழகத்தில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதில் சிறார்களும், இளைஞர்களும் ஈடுபடுவது தான் மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. இதற்கு உதாரணமாக நிகழ்ந்த சம்பவத்தில் அடுத்தடுத்து திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது.
கடந்த 5ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் வேங்கடமங்கலத்தில் பாலிடெக்னிக் மாணவர் முகேஷ் என்பவர் துப்பாக்கியால் சுடப்பட்டார். இவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வீடியோ கேம் விளையாட்டில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக கூறப்பட்டது.

பெண்ணின் தலையை 64 துண்டுகளாக கூறுபோட்டவர் விடுதலை...

இதுதொடர்பான போலீசார் விசாரணையில் கஞ்சா வியாபாரிகளின் தொழில் போட்டி, அவர்களின் ஆயுதப் பயன்பாடு உள்ளிட்டவை பின்னணியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. சென்னையின் புறநகர் பகுதிகளில் வெளியூர்களில் இருந்து வேலைக்காகவும், படிப்பிற்காகவும் வரும் இளைஞர்கள் பெருமளவில் தங்கி உள்ளனர்.

இவர்களை குறிவைத்து இரண்டு விதமான ரவுடி கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. இதற்கு நெடுங்குன்றம் சூர்யா, பெருமாட்டுநல்லூர் செல்வம் ஆகியோர் தலைவர்களாக இருக்கின்றனர். இந்த குழுக்கள் மாணவர்கள், இளைஞர்களுக்கு கஞ்சா விநியோகம் செய்து வருவதாக கூறப்படுகிறது.

பள்ளிக் கழிவறையில் மயக்கம் போட்ட மாணவி உயிரிழப்பு, கரூர் மாவட்ட ஆட்சியர் விசாரணை!

இந்த சூழலில் முகேஷ் கொல்லப்பட்ட வழக்கில் தப்பியோடிய விஜய், ரவுடி செல்வத்தின் குழுவைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது. கடந்த 6ஆம் தேதி செங்கல்பட்டு முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் விஜய் சரணடைந்தார். அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து தாழம்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பெருமாட்டுநல்லூரை சேர்ந்த ரவுடி செல்வத்திடன் துப்பாக்கி வாங்கியதாக விஜய் வாக்குமூலம் அளித்துள்ளார். தான் வேலை செய்யும் ரவுடியிடம் முகேஷையும் சேருமாறு விஜய் வற்புறுத்தியதால் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது. தனது துப்பாக்கியை நல்லம்பாக்கம் அருகே உள்ள கல் குவாரியில் மறைத்து வைத்திருப்பதாக கூறினார்.

நாய்க்குட்டி எங்கே? தாய் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்த மகள்!

உடனே கல் குவாரிக்கு சென்று துப்பாக்கியை போலீசார் மீட்டனர். இந்நிலையில் தேனி நீதித்துறை நடுவர் நீதிபதி பன்னீர்செல்வம் முன்பு ரவுடி செல்வம் ஆஜரானார். இவரை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து தேக்கம்பட்டி மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டார்.

அடுத்த செய்தி