ஆப்நகரம்

சென்னையில் பிரபல ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை!

வியாசர்பாடியில் இன்று அதிகாலை காவலரை அரிவாளால் தாக்கிவிட்டு, தப்பியோட முயன்ற ரவுடி என்கவுண்டரில் சுட்டுக் கொலை!

Samayam Tamil 15 Jun 2019, 10:21 am
சென்னை வியாசர்பாடியில் இன்று அதிகாலை காவலரை அரிவாளால் தாக்கிவிட்டு, தப்பியோட முயன்ற ரவுடி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil சென்னையில் பிரபல ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை!
சென்னையில் பிரபல ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை!


சென்னை மாதவரம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி வல்லரசு. இவன் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் ரவுடி வல்லரசு, தனது கூட்டாளிகளுடன் சென்னை வியாசர்பாடி எம்.என் கார்டன் பகுதியில் அரிவாளுடன் அட்டகாசம் செய்வதாக நேற்றிரவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் வியாசர்பாடி பி3 காவல் நிலையத்தில் பணிபுரியும் முதல் நிலை காவலர் பவுன்ராஜ், குற்றப்பிரிவு காவலர் ரமேஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து ரவுடி வல்லரசை சுற்றி வளைத்து கைது செய்ய முயற்சி செய்தனர்.

ஆனால் கூட்டாளிகளுடன் இருந்த வல்லரசு, காவலர்களை அரிவாளால் சரமாரியாக அங்கிருந்து தப்பியோடிவிட்டான். இதில் படுகாயமடைந்த பவுன்ராஜ் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தலையில் 20 தையல்கள் போடப்பட்டுள்ளன.

இந்நிலையில், மாதவரம் பேருந்து நிலையத்தின் பின்புறம் ரவுடி வல்லரசு பதுங்கியிருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, எம்கேபி நகர் காவல்நிலைய ஆய்வாளர் ஜான் மில்லர், ரவி தலைமையிலான போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்தனர்.

போலீசாரை கண்டதும் டூவிலரில் தப்பியோட முயன்ற ரவுடிகளைப் பிடிக்க முயன்றபோது, ரவுடி வல்லரசு போலீசாரை மீண்டும் தாக்குவதற்கு முயன்றுள்ளான். இதனைத் தொடர்ந்து ஆய்வாளர் மில்லர் தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் வல்லரசை சுட்டார். தொடர்ந்து குண்டு பாய்ந்த வல்லரசுவை சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதற்கிடையில், ரவுடியின் கூட்டாளிகளான வியாசர்பாடியைச் சேர்ந்த கதிரவன் மற்றும் பெரம்பூரைச் சேர்ந்த கார்த்திக் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

ரவுடி வல்லரசுவின் உடல் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் அதிகாலை நேரத்தில் போலீசார் நடத்திய என்கவுண்டர் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரவுடி வல்லரசு மீது, கொலை, கொலை முயற்சி, அடிதடி என 10 வழக்குகள் உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி