ஆப்நகரம்

போலீசார் மீது அமிலம் வீசிவிட்டு, அதை குடித்து தற்கொலைக்கு முயன்ற ரவுடி கைது

பெங்களூரில் கழிவறையை சுத்தம் செய்யும் அமலித்தால் காவலரை தாக்கிவிட்டு, அதை குடிக்க தற்கொலை செய்ய முயன்ற குற்றவாளியை போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Samayam Tamil 16 Feb 2019, 3:15 pm
பெங்களூரில் கழிவறையை சுத்தம் செய்யும் அமலித்தால் காவலரை தாக்கிவிட்டு, அதை குடிக்க தற்கொலை செய்ய முயன்ற குற்றவாளியை போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
Samayam Tamil போலீசார் மீது அமில வீச்சு- பிரபல ரவுடி கைது..!


கடந்த ஜனவரி 2ம் தேதி, பெங்களூரைச் சேர்ந்த பிரபல ரவுடி கங்காதாரை, அவரது வீட்டுக்குள் நுழைந்து, அரிவாளால் சராமாரியாக வெட்டிய குற்றத்திற்காக ஜகதீஷா என்பவரை பீன்யா பகுதி போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் தேடப்பட்டு வந்த ஜகதீஷாவும், அவரது கூட்டாளிகளான பாலா மற்றும் வருண் ஆகியோர் சிக்கபனவரா ஏரி பகுதியில் தலைமறைவாக இருப்பது காவல்துறைக்கு தெரியவந்தது. அதை தொடர்ந்து அவர்களை பிடிக்க காவல்துறை விரைந்தது.

இதை தெரிந்துக் கொண்ட ரவுடிகள் காரில் ஏறி தப்பிக்க முயன்றனர். அவர்களை துரத்திச் சென்ற காவலர்கள், 500 மீட்டர் தொலைவில் அவர்களை சுற்றிவளைத்தனர். அப்போது கையில் வைத்திருந்த அமில குப்பியை திறந்து ஊற்றிவிடுவதாக போலீசாருக்கு ரவுடி ஜெகதீஷா மிரட்டல் விடுத்தார்.

எனினும், அமிலக் குப்பியை போலீசார் மீது ரவுடி ஜெகதீஷா வீசினார். மீதமிருந்த அமிலத்தை அவர் பருகிவிட்டார். இதனால் உடல் சோர்வுற்று, போலீசாரிடம் ஜெகதீஷா சிக்கிக்கொண்டார். அவரை காவல்துறை கைது செய்தது.

அதை தொடர்ந்து, சப்தகிரி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரவுடி ஜெகதீஷாவை காவல்துறையினர் அனுமதித்தனர். பலதரக்கட்ட சிகிச்சைக்கு பிறகு ரவுடி ஜெகதீஷாவை மருத்துவக் குழு காப்பாற்றினார்.

ரவுடி ஜெகதீஷா அருந்திய அமிலம், கழிவறையை சுத்தம் செய்வதற்காக பயன்படுத்தப்படும் திரவியம் என பரிசோதனையில் தெரியவந்தது. ஏற்கனவே கங்காதார் அரிவாள் வெட்டு வழக்கில் ஜெகதீஷா தேடப்பட்டு வந்த நிலையில், அவர் மீது காவல்துறையினரை கொலை செய்ய முயற்சித்த வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி