ஆப்நகரம்

ரூ. 20 ஆயிரம் பணத்துக்காக குழந்தையை விற்ற பெற்றோர்!

சேலம் மாவட்டம் தீவெட்டிப்பட்டியை சேர்ந்த தம்பதி ஒருவர் 4ஆவதாக பெண் குழந்தை பிறந்ததால், அவரை ரூ. 20 ஆயிரம் காசுக்கு விற்ற தம்பதியைக் கிராம நிர்வாக அலுவலர் எச்சரித்தார்.

Samayam Tamil 26 Nov 2019, 3:31 pm
சேலம் மாவட்டம் தீவெட்டிப்பட்டியை சேர்ந்த தம்பதி ஒருவருக்கு 2 பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் இருந்தது. இவர்களுக்குச் சமீபத்தில் 4ஆவதாக குழந்தை ஒன்று பிறந்தது. அது பெண் குழந்தை.
Samayam Tamil Cradle-children-foundation-Our-Children-are-not-for-Sale1-696x480


பெண் குழந்தை என்பதால் அவரை வளர்க்கச் சிரமப்பட வேண்டும் பெற்றோர் கருதியுள்ளனர். இதனால், அந்த குழந்தையைப் பணத்திற்கு விற்று விடலாம் என முடிவு செய்கின்றனர்.

பாட்டியிடம் செயின் பறிப்பு, பெண்ணின் போட்டோ ஆபாசமாக சித்தரிப்பு, ஒருவர் கைது...

அதன்படி சேலம் மாவட்டஹ்த்டில் டேனிஷ்பேட்டையை சேர்ந்த ஒரு தம்பதி பல ஆண்டுகளாகக் குழந்தை இல்லாமல் இருந்துள்ளனர் என்பதை அறிந்து, அவர்களைத் தொடர்பு கொண்டு பெண் குழந்தையை ரூ. 20 ஆயிரத்துக்கு விற்றுள்ளனர்.

இந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் பரவியுள்ளது. இதுகுறித்து தீவெட்டிப்பட்டி கிராம அலுவலரும் கேட்டறிந்து, சம்பந்தப்பட்ட தம்பதியை அலுவலகத்திற்கு வரவழைத்துள்ளார். அதே நேரத்தில் அதிகாரிகளை வைத்து குழந்தையைக் கிராம அலுவலர் மீட்டுள்ளார்.

அரை கிலோ சிக்கன் சாப்பிட்டுவிட்டு, கள்ளநோட்டை நீட்டிய பி.டி. மாஸ்டர்

குழந்தையை விற்ற தம்பதியிடம் குழந்தையை ஒப்படைத்து விட்டு, அவர்கள் பெற்ற பணத்தைச் சம்பந்தப்பட்ட தம்பதியிடம் திருப்பி ஒப்படைத்தனர். மேலும், குழந்தையை விற்ற தம்பதியிடம், இதுபோன்ற செயல்களில் மீண்டும் ஈட்டுப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி