ஆப்நகரம்

இப்படியும் பீதியை கிளப்பும் சைகோ!- தனியாக வீட்டில் இருக்கும் பெண்கள் உஷார்!

வீடுவீடாக கதவை தட்டி விட்டு ஓட்டம் பிடிக்கும் சைகோவின் செயலால் சேலம் பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

Samayam Tamil 1 Jul 2019, 7:36 pm
சேலம் மாவட்டம் அம்மா பேட்டை பகுதியில் ஒரு சைகோ நள்ளிரவில் வீடுவீடாக கதவை தட்டி விட்டு ஓட்டம் பிடிக்கும் செயலை செய்து வருவதால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.
Samayam Tamil Salem Psycho 1


சேலம் அம்மாபேட்டை பகுதியில் சில நாட்களாக பெண்கள் தனியாக இருக்கும் வீட்டின் கதவை தட்டி வீட்டு யாரோ ஓட்டம் பிடித்துவிடுவதாகவும், திருடர்கள் பயம் அதிகரித்துள்ளதாக அச்சம் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து நடத்தப் பட்ட ஆய்வில், மர்ம நபர் கதவை தட்டி பீதியை கிளப்பும் சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த மர்ம நபர் இரவில் வீடு வீடாக சென்று நோட்டமிட்டு, பெண்கள் தனியாக இருக்கும் வீட்டின் கதவை தட்டிவிட்டு ஓடிவிடுவதாகவும், ஆல் நடமாட்டம் இல்லை என்றால் மாடி வழியே வீட்டிற்குள் நுழைய முயல்கிறான்.

ஆட்கள் நடமாட்டம் தெரிந்தால் பயந்து தனது சட்டையை கழற்றி அக்குளில் வைத்துக் கொண்டு ஓட்டம் பிடிக்கும் காட்சி பதிவாகி உள்ளது. இது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கக்கூடும் என தெரிவிக்கப்படும் அதே வேளையில் வீசாரணை தீவிரமாகி உள்ளது.

அடுத்த செய்தி