ஆப்நகரம்

சப் இன்ஸ்பெக்டரை மோதி செல்ல முயன்ற மணல் கடத்தல் லாரி; பள்ளத்தில் தாவி உயிர் பிழைப்பு

விக்கிரவாண்டி அருகே சப் இன்ஸ்பெக்டர் மீது லாரி ஏற்றி கொலை செய்ய முயற்சி:- மணல் கடத்தல் லாரிகளை தடுத்து நிறுத்த முயன்ற போது நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்.

Samayam Tamil 14 Apr 2022, 7:02 pm
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் தேவரத்தினம் தலைமையிலான போலீசார் இன்று காலை பனையபுரம் கூட்ரோட்டில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக அடுத்தடுத்து வந்து கொண்டிருந்த இரண்டு டாரஸ் லாரிகளை நிறுத்தும்படி விக்கிரவாண்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் தேவரத்தினம் கையசைத்து சைகை காட்டினார்.
Samayam Tamil villupuram news


ஆனால், அந்த இரண்டு லாரிகளும் நிறுத்தாமல் மின்னல் வேகத்தில் வந்து காவல்துறை உதவி ஆய்வாளர் தேவரத்தினம் மீது மோதுவது போல் வந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த உதவி ஆய்வாளர் தேவரத்தினம் சாலையோரம் உள்ள பள்ளத்தில் எகிறி குதித்தார். இதில் உதவி ஆய்வாளர் தேவரத்தினம் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக மயிரிழையில் உயிர் தப்பினார். இதனைத்தொடர்ந்து நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்ற இரண்டு லாரிகளையும் மற்ற போலீசார் விரட்டி சென்று முண்டியம்பாக்கம் என்ற இடத்தில் மடக்கி பிடித்து நிறுத்தினர்.

இதனைத்தொடர்ந்து லாரியை போலீசார் சோதனை நடத்தியதில் அதில் மணல் கடத்தி செல்லப்படுவது தெரியவந்தது. இதனையடுத்து மணல் கடத்தலில் ஈடுபட்டத்தோடு, காவல்துறை உதவி ஆய்வாளர் மீது லாரி ஏற்றி கொலை செய்ய முயற்சித்ததாக விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர்களான விழுப்புரம் சாலாமேட்டைச் சேர்ந்த ராஜா, ராதாபுரத்தைச் சேர்ந்த அய்யப்பன் மற்றும் கீளினர்களான கனகராஜ், சுபாஷ் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்ணாமலை விரைவில் கைது..? காயத்ரி ரகுராம் ஆக்ரோஷம்... வெடித்தது உச்சகட்ட சர்ச்சை

மேலும், இரண்டு மணல் லாரிகளையும் போலீசார் கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மணல் கடத்தல் லாரிகளை தடுத்து நிறுத்த முயன்ற காவல்துறை உதவி ஆய்வாளர் மீது லாரி ஏற்றி கொலை செய்ய முயற்சித்துள்ள சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி