ஆப்நகரம்

நடிகை சந்தியா கொலை வழக்கு. சிபிஐ விசாரணை வேண்டும்: பெற்றோர் கோரிக்கை

துணை நடிகை சந்தியாவின் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Samayam Tamil 27 Feb 2019, 12:42 pm
துணை நடிகை சந்தியாவின் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
Samayam Tamil pic


சென்னையை அடுத்து உள்ள பள்ளிக்கரணையில் குப்பை கொட்டும் இடத்தில் பெண்ணின் கை மற்றும் 2 கால்கள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் தூத்துக்குடியை சேர்ந்த சந்தியா(வயது 37) என்பது தெரிய வந்தது.

மேலும் அவரை அவரின் கணவர் பாலகிருஷ்ணன் கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி வீசியது காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்தது. சினிமா ஆசையில் சென்னை வந்த சந்தியா சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.

வெட்டி வீசப்பட்ட சந்தியாவின் தலையை காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர். கைது செய்யப்பட்ட கணவர் பாலகிருஷ்ணனிடமும் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் , சந்தியாவின் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

அடுத்த செய்தி