ஆப்நகரம்

டீச்சரே செம்மையா இருக்கும்யா... சிறையில் சிவசங்கர் பாபா சொன்ன ரகசியம்... சாட்டை தகவல்

சிறைக்குள் வசூலாகும் பணம் தமிழக சட்டத்துறை அமைச்சர் உட்பட அதிகாரிகளுக்கு செல்கிறது என்று சாட்டை துரைமுருகன் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 7 Oct 2022, 4:09 pm
சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாக குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதான நாம் தமிழர் கட்சியை சேர்ந்த யூ டியூபர் சாட்டை துரைமுருகன் சுமார் 200 நாட்களுக்கு பின்னர் சிறையில் இருந்து விடுதலையாகியுள்ளார். இந்நிலையில் அவர் மீடியாக்கு அளித்து வரும் பேட்டிகள் பரபரப்பாக உள்ளது. தனது சிறை அனுபவம் மற்றும் பாலியல் புகாரில் கைதாகி சிறையில் உள்ள சிவசங்கர் பாபாவை சந்தித்த நிகழ்வு குறித்து பேசியது கவனம் பெற்றுள்ளது.
Samayam Tamil saatai duraimurugan


சிறையில் ஒருநாளைக்கு நல்ல சாப்பாட்டை சாப்பிட 700 ருபாய் வரை செலவாகும். காலை உணவு 100 ரூபாய், டீ 50 ரூபாய், மூன்று வடை 50 ரூபாய், மதிய சாப்பாடு 200, ஆம்லெட் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனக்கு ஒரு மாதத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் செலவானது. கேன்டீனை நடத்துவது உள்ள இருக்கும் காவலர்கள் தான். இந்த பணம் சிறை மேல் அதிகாரிகள் உட்பட சட்டத்துறை அமைச்சருக்கு வரை போகும்.

போதை பழக்கம் உள்ள சிறைவாசிகளுக்கு சிறைக்குள் போதை தேவைப்படும். அவர்களை சமநிலையான வைத்துக்கொள்ள சட்ட விரோதமாக சிறைக்குள்ளேயே பீடி விற்கப்படுகிறது. ஒரு கட்டு பீடி 350 ரூபாய். அதை வாங்க சிறைக்குளேயே கூகுள் பே நம்பர் கொடுத்துவிடுவார்கள். அந்த அக்கவுண்ட் இரண்டு மாதங்கள் வரை ஆக்டிவாக இருக்கும். அந்த எண்ணை சிறைவாசியின் குடும்பத்தினருக்கு கொடுத்துவிட்டால் அவர்கள் காசு போட்டுவிடுவார்கள். அந்த பணத்தில் சிறை கைதிகள் பீடி மற்றும் உணவு பொருட்களை வாங்கிக்கொள்வார்கள். பீடி வாங்கவே காசு இல்லாதவர்கள் மற்றவர்களுக்கு எடுப்பு வேலை செய்து அவர்களிடம் இருந்து கூலியாக பீடியை பெற்றுக்கொள்வார்கள். கிட்டத்தட்ட 213 நாட்கள் சிறையில் இருந்ததால் சொல்கிறேன் சினிமாவில் காட்டப்படும் சிறை என்பது வேறு. நிஜ சிறையை இதுவரை சினிமாவில் காட்டவே இல்லை. உள்ளே எல்லாமே பணம்தான். உள்ளே நான் வாங்கிய செருப்பின் விலை 2500 ருபாய். அதை வெளியில் வாங்கினால் 300 ரூபாய்தான் இருக்கும்.

சிவசங்கர் பாபாவை சந்தித்தேன்

இதுதான் விதி. சிவசங்கர் பாபாவை பற்றி பேசிய நானும், அந்த பாபாவும் அதே சிறையில் இருந்தோம். ஒரு காவலர் என்னை சிவசங்கர் பாபாவிடம் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது என்னை பார்த்து, நீயும் என்னை பற்றி பேசியுள்ளாய்... நான் எதற்கு குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்போகிறேன்? என் ஸ்கூல்ல டீச்சரே அழகா இருப்பாங்க என்று அவர் கூறியதும் அதிர்ச்சி ஆயிட்டேன்... பாபாவுக்கு உள்ள சகல வசதி இருக்கு... தினமும் பழங்கள், தயிர் சாதமும் அவருக்கு வந்துடும்.. அவர் அதைத்தான் சாப்பிடுவார். சிவசங்கர் பாபாவின் அந்த இடத்தை அரசுக்கு ஆதரவான ஒரு நபர் எழுதி வாங்க முயன்றுள்ளார். அதற்கு பாபா சம்மதிக்காததால் அவர் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் தள்ளியதாக பாபா என்னிடம் கூறினார். அனைத்து வழக்குகளையும் உடைத்து வெளியில் வருவேன். வெளியில் வந்ததும் என்னை வந்து சந்தியுங்கள் என்று சாட்டை துரைமுருகனிடம் சிவசங்கர் பாபா சொன்னதாக அவர் கூறினார்.

அடுத்த செய்தி