ஆப்நகரம்

ஸ்கூல் ஃபர்ஸ்ட் மாணவி, பேராசிரியரால் தற்கொலை..! மதுரையில் துயரம்

மதுரை அருகே பேராசிரியர் அவமானப்படுத்தியதாக மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 6 Feb 2021, 4:38 pm
மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மனைவி ஜோதி. இந்த தம்பதிக்கு பத்மப்ரியா என்ற மகள் இருந்துள்ளார். ஏழ்மை குடும்பத்தில் பிறந்த பத்மப்ரியா, பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகளில் அதிகபட்ச மதிப்பெண்களை பெற்றவர். இந்நிலையில் இவர் மதுரையில் உள்ள கல்லூரியில் பிஎஸ்சி கணிதம் முன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
Samayam Tamil madurai college girl suicide


ஏற்கனவே செமஸ்டர் தேர்வில் வகுப்பில் முதல் மாணவியாக வந்த பத்மப்ரியா தங்கப்பதக்கத்தையும் பெற்று கல்லூரிக்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார். இந்நிலையில், கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டு பின்னர் கடந்த 2ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டன. நீண்ட நாட்களுக்கு பிறகு கனவுகளுடன் கல்லூரிக்கு சென்ற பதம்ப்ரியாவை, கணித பாடத்தில் உள்ள சந்தேகங்களை தீர்க்குமாறு சக மாணவ, மாணவிகள் கேட்டுள்ளனர்.

அதன்படி, வகுப்பில் பேராசிரியர் இல்லாததால் பத்மப்ரியா பாடம் எடுத்துள்ளார். அப்போது, கணித துறையின் தலைவரும், பேராசிரியருமான முத்துக்குமார் வகுப்புக்குள் நுழைந்துள்ளார். அதை கண்டு கடும் கோபமடைந்த முத்துக்குமார், '' பாடம் எடுக்கும் அளவிற்கு நீ என்ன பேராசிரியரா? என்று ஈகோவால் திட்டி மாணவர்கள் முன்பு அவமானப்படுத்தியுள்ளார். அதோடு விடாமல், மாணவியை வெகுநேரம் நிறக்கசொல்லி பாட சம்மந்தமான கேள்விகளை கேட்டுள்ளார்.

சித்ராவின் விரல், நகம், உரையாடல் ஆய்வு..! சிக்கப்போவது யார்?

அதற்கு, மாணவியால் பதிலளிக்க முடியாமல் போகவே, வகுப்பறையை விட்டு வெளியே நிற்க கூறியுள்ளார். இதனால் கண்ணீர் விட்டு அழுத பத்மப்ரியாவை சக மாணவிகள் சமாதானப்படுத்த முயற்சித்தனர். ஆனால், அவர்களையும் பேராசிரியர் முத்துக்குமார் மிரட்டியதாக கூறப்படுகிறது. பின்னர் கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்த பத்மப்ரியா யாரிடமும் பேசாமல் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் அன்று இரவு பத்மப்ரியா விஷம் அருந்திவிட்டு மயங்கியுள்ளார்.

அதை கண்ட பெற்றோர் அவரை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், பத்மப்ரியா வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் மகளின் தற்கொலைக்கு காரணமான பேராசிரியர் முத்துகுமாரிடம் சென்று பத்மப்ரியாவின் பெற்றோர் வாக்குவாதம் செய்துள்ளனர்.

அப்போது, பதட்டம் இல்லாமல் காணப்பட்ட முத்துக்குமார், உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்யுங்கள் என கூறியுள்ளார். இதையடுத்து, முத்துக்குமாரை கைது செய்து, அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும் வரை மகளின் சடலத்தை வாங்க மாட்டோம் என பெற்றோரும், ஊர் மக்களும் போலீசாரிடம் கூறி மறியலில் ஈடுபட்டனர். ஆனால், மகளின் இறுதி சடங்கை ஒழுங்காக நடத்துங்கள் என போலீசார் கூறியதையடுத்து சடலம் பெற்றுக்கொள்ளப்பட்டது. இந்நிலையில், இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்கு பதிவு செய்துள்ள திருமங்கலம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி