ஆப்நகரம்

'11ம் வகுப்பு கஷ்டமா இருக்கு'... பள்ளி மாணவி தற்கொலை... போலீஸ் வீட்டில் அதிர்ச்சி சம்பவம்

சென்னை, கீழ்ப்பாக்கத்தில் 11ம் வகுப்பு பாடம் கடினமாக இருப்பதாக கூறி, பெண் தலைமை காவலர் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 11 Aug 2022, 7:33 pm
சென்னை, கீழ்ப்பாக்கம், காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் ராமதேவன். இவரது மனைவி கலைவாணி (46), இவர், புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு பிரிவில், தலைமை காவலராக உள்ளார்.
Samayam Tamil school girl suicide

இவரது மகள் முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில், 11ம் வகுப்பு படித்து வந்தார்.

வழக்கம்போல நேற்று காலை, கலைவாணி வேலைக்கு சென்று விட்டார். அப்போது, மாணவியின் சகோதரர் குணசேகரன், வீட்டிற்கு வந்தார். அப்போது, மாணவி தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அவர் அதிர்ந்துபோனார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த குணசேகரன், தன் தாய் கலைவாணிக்கு தெரியப்படுத்தினார். தகவல் கிடைத்து, கீழ்பாக்கம் போலீசார் விரைந்து வந்து, மாணவியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அவர், 11ம் வகுப்பு பாடத்திட்டம் கடினமாக உள்ளது . சரியாக படிக்க முடியவில்லை என்ற விரக்தியில் தற்கொலை செய்துக்கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இது கொலை தான்... கைதான ஆசிரியையின் தந்தை பகீர்..! கள்ளக்குறிச்சி வழக்கில் திருப்பம்

தமிழகத்தில் நாளுக்குநாள் பள்ளி மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் அதிகரித்துள்ள நிலையில் மேலும் ஒரு மாணவி பாட திட்டம் கடினமாக இருப்பதாக கூறி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் தீர்வல்ல... யாரேனும் மனநலப் பிரச்சினைகளை எதிர்கொண்டாலோ அல்லது தற்கொலை எண்ணம் இருப்பது பற்றி உங்களுக்குத் தெரிய வந்தாலோ தயவுசெய்து மாநில சுகாதாரத் துறையின் உதவி எண்: 104 அல்லது 'சினேகா தற்கொலை தடுப்பு மையம்: 044-24640050 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள்.

அடுத்த செய்தி