ஆப்நகரம்

பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சகோதரர்கள்: மதுரையில் கொடூரம்!

மதுரை, பேரையூர் அருகேயுள்ள ஓணாப்பட்டி கிராமத்தில் திருமணத்திற்கு மறுத்த பள்ளி மாணவியை சகோதரர்கள் இருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 17 Oct 2019, 7:57 am
மதுரை செல்லூரைச் சேர்ந்தவர்கள் பால்பாண்டி தனலெட்சுமி தம்பதியினர். இவர்கள் மகள் சந்தியா (16). இவர் மதுரை தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பால்பாண்டியின் சொந்த ஊரான பேரையூர் அருகேயுள்ள ஓணாப்பட்டி கிராமத்தில் கோவில் திருவிழா நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதாற்காக தனது குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வந்தார். திருவிழா முடிந்ததும் பால்பாண்டி தன்னுடைய மகளான சந்தியாவை, பாட்டி செல்லம்மாள் வீட்டில் தங்கவிட்டு மீண்டும் மதுரை சென்றார்.
Samayam Tamil Untitled collage


பிஸ்கட் பாக்கெட்டை காட்டி பேத்தி வயது சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு.! தீராத கொடுமை..
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்தியா ஊருக்கு அருகே உள்ள தோட்டத்தில் குளிப்பதற்காக தனியாக சென்றுள்ளார். ஆனால் இரவாகியும் வீட்டிற்கு வரவில்லை. உடனே உறவினர்கள் பல இடங்களில் தேடிப் பார்த்தபோது தோட்டப்பகுதியில் தலையில் பலத்த காயங்களுடன் சடலமாக கிடந்ததை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே சேடபட்டி போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்த போலீஸார் சந்தியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமணைக்கு அனுப்பிவைத்தனர்.

மகனுக்கு சிப்ஸ் பாக்கெட்.... தந்தைக்கு எலக்ட்ரிக் ஷாக்... போலீஸ் லாக்கப்பில் நேர்ந்த சோகம்

பின்னர் பள்ளிமாணவி சந்தியாவின் கொலைக்காண காரணம் குறித்து விசாரனையைத் தொடங்கினர். அப்போது அதே ஊரைச் சேர்ந்த அம்மாசி மகன் மாதவன்(24) சேடபட்டி போலீஸில் சரணடைந்தார். அப்போது முதற்கட்ட விசாரணையில் சந்தியாவை கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்ததாகவும், திருமணம் செய்ய சம்மதம் தெரிவிக்காததால் சந்தியா குளிக்க சென்றபோது பின்தொடர்ந்து தலையில் கல்லால்தாக்கி கொலைசெய்ததாகவும் வாக்குமூலம் கொடுத்தார். இதனை நம்பாத போலீஸார் மேலும் விசாரணையை தொடங்கினர்.

விரைவில் முருகனை விசாரிப்போம்: திருச்சி கமிஷ்னர் அமல்ராஜ் உறுதி!

அப்போது மாதவன் சந்தியாவை ஆள் இல்லாத இடத்திற்கு வரவழைத்துள்ளார். உடன் மாதவனின் தம்பி மதுவும் சென்றுள்ளார். இருவரும் சேர்ந்து சந்தியாவை பாலியியல் வன்புணர்வு செய்து விட்டு தலையில் கல்லைத்தூக்கி போட்டு கொன்று விட்டு உடலை புதருக்குள் வீசிவிட்டுச் சென்றுள்ளனர் என்பது தெரியவந்தது. சேடபட்டி போலீஸார் இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் வன்கொடுமை, கொலை வழக்குகளை பதிவு செய்தனர். தொடர்ந்து மாதவன் தம்பி மதுவை (24) தேடி வந்தனர். போலீஸார் தேடுவது தெரிந்ததும் மது உசிலம்பட்டி சார்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி ராஜேஷ் குமார் மதுவை ஒரு நாள் போலிஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். இதனையடுத்து போலீஸார் மதுவை விசாரணைக்காக பேரையூர் காவல் நிலையம் கொண்டு சென்றனர். இச்சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி