ஆப்நகரம்

பாட்டிலை உடைத்து சொருகிய பள்ளி மாணவர்கள்... குமரியில் பரபரப்பு... அதிர்ச்சி வீடியோ

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பள்ளி மாணவர்கள் கொண்ட கும்பல் பாட்டிலால் குத்தி விட்டு தப்பி ஓட்டம். பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

Samayam Tamil 5 Dec 2021, 2:44 pm
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அண்ணா பேருந்து நிலையத்திற்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு அங்கு வந்த சில மாணவர்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டது.
Samayam Tamil kanyakumari school students clash


இரு கும்பலாக மோதிக் கொண்ட நிலையில், அங்கு பூ வியாபாரம் செய்து கொண்டிருந்த செண்பகராமன்புதூர் பகுதியை சேர்ந்த 38 வயதான கண்ணன் என்பவர் போலீசாருக்கு தகவல் அளித்ததாக தெரிகிறது.

போலீசார் அங்கு சென்றபோது மாணவர்கள் தப்பியோடினர். போலீசாருக்கு தகவல் அளித்ததால் முன்விரோதம் கொண்ட மாணவர்கள் கும்பலாக நேற்று அண்ணா பேருந்து நிலையத்திற்கு சென்று, அங்கு நின்று கொண்டிருந்த கண்ணனின் வயிற்றில் பாட்டிலால் குத்தி விட்டு தப்பியோடினர்.


இதனால் காயமடைந்த கண்ணனை அப்பகுதியினர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்வத்தில் ஈடுபட்ட மாணவர்களை கோட்டார் போலீசார் தீவிரமாக தேடி வருவதோடு, சம்பவ பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி