ஆப்நகரம்

சென்னை மின்சார ரயிலில் சாகசம் செய்யும் பள்ளி மாணவி, மாணவன்... வைரல் வீடியோ!

சென்னை அருகே மின்சார ரயிலில் வீர சாகசம் செய்யும் பள்ளி மாணவ, மாணவியின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 25 Nov 2021, 2:37 pm
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மீண்டும் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், ஆசிரியர்கள் கட்டாயம் கொரோனா நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பெற்றோர்களும் பதட்டத்துக்கு மத்தியில் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.
Samayam Tamil file pic


இந்நிலையில்,முகக்கவசம் அணிந்துகொண்டு பொறுப்பாக பள்ளிக்கு சென்று வருவதை விட்டுவிட்டு அரசு பள்ளி, மாணவன் மற்றும் மாணவி இருவர் மின்சார ரயிலில் புட்போர்டு அடித்துக்கொண்டு பயணம் செய்யும் விபரீத ஈடுபட்டுள்ள சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே சென்று கொண்டிருந்த மின்சார ரயிலில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

ஸ்டேஷனில் இருந்து வேகமாக புறப்படும் மின்சார ரயிலில் சிறிதும் அச்சமின்றி நடைபாதையில் இருந்து ஓடிக்கொண்டே புட்போர்டு அடிக்கும் மாணவி, மாணவியுடைய வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மற்றும் புறநகரில் இதுபோன்ற சம்பவங்கள் ஒன்றும் புதிதல்ல.


'திருவள்ளூர் ரூட் வீடியோ', 'சென்னை மின்சார ரயில் ரூட் மாணவர்கள்' என்று யூடியூபில் தட்டினாலே பள்ளி சிறார்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை செய்யும் அட்டூழியங்கள் அம்பலமாகும். ரயில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் , ஓடும் ரயிலிலும் ரயில்வே போலீசார் பயணிக்கின்றனர். ஆனாலும், இதுபோன்ற சம்பவங்கள் குறைந்தபாடில்லை என்பதே கசப்பான உண்மை...

அடுத்த செய்தி