ஆப்நகரம்

குடும்ப விரோதம் காரணமாக பட்டப்பகலில் ஆசிரியர் வெட்டி படுகொலை..!

தூத்துக்குடியில் மனைவி பிரிந்து சென்று வேறொரு பெண்ணுடன் வசித்து வந்த பள்ளி ஆசிரியரை, அவருடையே உறவினர் ஒருவரே வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 8 Jul 2019, 6:36 pm
விளாத்திக்குளம் அருகேவுள்ள புதூர் என்ற இடத்தில் வட்டார வளம் மையத்தில் சிறப்பு பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஆசிரியராக பணியாற்றி வருபவர் வடிவேல் முருகன். இவர் பள்ளிக்கு அருகில் அடையாளம் தெரியாத நபரால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
Samayam Tamil தூத்துக்குடியில் படுகொலை செய்யப்பட்ட பள்ளி ஆசிரியர்
தூத்துக்குடியில் படுகொலை செய்யப்பட்ட பள்ளி ஆசிரியர்


இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. வடிவேல் முருகனின் கொலை குறித்து விசாரித்த காவல்துறையினர், அவருடைய உறவினரான அற்புத செல்பவம் என்பதை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்தன.

வடிவேல் முருகனுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இதற்கிடையில் கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளன. அப்போது வடிவேல் முருகனுக்கும், வேறொரு பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இதை தெரிந்துக் கொண்ட அவருடைய மனைவியின் சகோதரரான அற்புத செல்வம், வடிவேல் முருகனை கண்டித்துள்ளார். ஆனால் தொடர்ந்து அவர், திருமணத்திற்கு மீறிய உறவில் ஈடுபாட்டு காட்டி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அற்புத செல்வம், வடிவேல் முருகனை கொல்ல திட்டமிட்டார்.

அப்போது பள்ளி அருகில் தனிமையில் வடிவேல் முருகன் இருந்ததை பார்த்த அற்புத செல்வம், அரிவாளால் வெட்டி படுகொலை செய்தார். மேலும அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

அடுத்த செய்தி