ஆப்நகரம்

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ரூ.25 லட்சம் மதிப்புள்ள கடல் குதிரைகள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த அரசால் தடை செய்யப்பட்ட அரிய வகை கடல் குதிரைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அவற்றின் சர்வதேச மதிப்பு ரூ.25 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 6 Feb 2020, 5:28 pm
ராமேஸ்வரம்: இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ரூ.25 லட்சம் மதிப்புள்ள கடல் குதிரைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
Samayam Tamil பறிமுதல் செய்யப்பட்ட கடல் குதிரைகள்
பறிமுதல் செய்யப்பட்ட கடல் குதிரைகள்


அரசால் தடை செய்யப்பட்ட அரிய வகை கடல் குதிரைகளை படகு மூலம் இலங்கைக்கு கடத்தி சென்று அங்கிருந்து அவற்றை வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லும் பொருட்டு ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, சுங்கத்துறை கண்காணிப்பாளர் கோச்சடை முத்து மற்றும் ஆய்வாளர் வேல்முருகன் ஆகியோர் தலைமையிலான சுங்கத்துறை அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர்.

செருப்பை கழற்ற சொன்ன விவகாரம்: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம்

அப்போது, கடற்கரை ஓரங்களில் ஆறு சாக்கு மூட்டைகளில் கட்டி பூமிக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் கடல் குதிரைகளை பதுக்கி வைத்தவர்களை தேடி வருகின்றனர்.


பறிமுதல் செய்யப்பட்ட அரியவகை கடல் குதிரைகளின் சர்வதேச மதிப்பு ரூ.25 லட்சம் என சுங்கத்துறை அதிகரிகள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி