ஆப்நகரம்

காரும், பணமும் என்னுடையது அல்ல..! சென்னையில் சிக்கிய பண மூட்டை அமைச்சருடையதா?

கும்மிடிப்பூண்டி சோதனை சாவடியில் சிக்கிய 4 கோடி ரூபாய் என்னுடையது அல்ல என்று ஆந்திரா அமைச்சர் பாலினேனி சீனிவாஸ் ரெட்டி திட்டவட்டம்.

Samayam Tamil 16 Jul 2020, 6:13 pm
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சோதனை சாவடியில் ஆரம்பாக்கம் போலீசார் கடந்த புதன்கிழமை அன்று சோதனை பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, ஆந்திராவில் இருந்து சென்னையை நோக்கி வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனையிட்டனர்.
Samayam Tamil balineni srinivas reddy


எம்எல்ஏ ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்த அந்த காரில் பயணித்த மூன்று பேரிடம் விசாரித்தபோது, திடீரென அவர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர். அவர்களை பின்தொடர்ந்து விரட்டி சென்ற போலீசார் மடக்கி பிடித்தனர். இதற்கிடையில் காருக்குள் ஆய்வு செய்தபோது நான்கு பைகளில் சுமார் நான்கு கோடி ரூபாய் வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர்.

எந்த ஆவணமும் இல்லமால் கைப்பற்றப்பட்ட பணத்தை பறிமுதல் செய்த போலீசார், காரில் வந்த மூன்று பேரை ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தனர். அப்போது அந்த பணத்தை ஆந்திர அமைச்சர் பாலினேனி சீனிவாஸ் ரெட்டி கொடுத்து அனுப்பியதாக கூறினர். இதனால் ஆந்திரா அமைச்சர்களுக்கிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

''பலமுறை கர்ப்பம் ஆயிட்டேன் உன் கணவனால்''... இளம்பெண் வீடியோ வெளியிட்டு தற்கொலை...

இந்நிலையில் சென்னையில் காரில் கைப்பற்றப்பட்ட பணம் என்னுடையது அல்ல என்று பாலினேனி சீனிவாஸ் ரெட்டி பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில், ஸ்டிக்கரை போட்டோஷாப் மூலம் தயார் செய்ய முடியும். அந்த பணத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. பணம் எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்ட கார் தமிழக பதிவு எண் உடையதாகும். கார் டிரைவர் ஒங்கோலை சேர்ந்தவர் ஆகையால் அப்படி கூறியிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி