ஆப்நகரம்

காரில் கடத்தி வந்த 100 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்..! திருப்பூரில் தொடர் நடவடிக்கை

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 3 நபர்களை திருப்பூர் போலீசார் கைது செய்தனர்.

Samayam Tamil 8 Feb 2022, 7:18 pm
திருப்பூர் மாவட்டம் அவிநாசி சுற்று வட்டாரப் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின் படி, காவல் ஆய்வாளர் கீதா மேற்பார்வையில், உதவி ஆய்வாளர்கள் அமல் ஆரோக்கியதாஸ், லோகநாதன் ஆகியோர் கொண்ட குழுவினர் தெக்கலூர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
Samayam Tamil trichy news


அப்போது, அவிநாசி நாதம்பாளையம் பிரிவு அருகே கோவையில் இருந்து அவிநாசி நோக்கி வந்த காரை போலீசார் நிறுத்தி விசாரணை மேற்கொண்டதில், காரில் வந்தவர்கள் அன்னூர் கீரநத்தம் மகாலஷ்மி நகரைச் சேர்ந்த செல்வராஜ் (24), கோவை ரத்தனபுரி நலம்பாளையம் லஷ்மி நகர் பகுதியைச் சேர்ந்த முத்துராஜ்(20) என்பதும் தெரிந்தது. மேலும், இவர்கள் விற்பனை செய்வதற்காக புகையிலைப் பொருட்களை காரில் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து செல்வராஜ், முத்துராஜ் ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த 100 கிலோ புகையிலைப் பொருட்கள், கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

'அல்லாஹு அக்பர்'... காவி மிரட்டலுக்கு நடுவே கர்ஜனை ... பதட்டத்தில் கர்நாடகா

இதேபோல தெக்கலூர் ஓம் ஆதித்யா நகர் பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் அதே பகுதியைச் சேர்ந்த ஆசிர் (38) என்பதும், புகையிலைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து ஆசிரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த 20 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

அடுத்த செய்தி