ஆப்நகரம்

சென்னையில் இப்படியுமா நடக்குது? பள்ளி குழந்தைகளுக்கு கஞ்சா விற்ற தாய், மகன்!

பள்ளி குழந்தைகளுக்கு கஞ்சா விற்ற தாய், மகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Samayam Tamil 5 Sep 2019, 10:21 am
சென்னை நெற்குன்றம் அடுத்த அண்ணம்மால் நகரில் இருந்து போலீசாருக்கு சில புகார்கள் வந்துள்ளன. அதாவது, எங்கள் வீடுகளுக்கு அருகே சந்தேகப்படும் வகையிலான நபர்கள் அடிக்கடி வந்து செல்கின்றனர்.
Samayam Tamil Police


சில நேரங்களில் அவர்கள் அதிகம் சத்தம் போடுகின்றனர். அவர்களில் சீருடை அணிந்த பள்ளி மாணவர்களும் அடங்குவர் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து விசாரிக்க குறிப்பிட்ட பகுதியில் உள்ள சில வீடுகளில் போலீசார் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.

மனநிலை பாதித்த சிறுமியை 4 மாசமா பலாத்காரம் செய்த கொடூரம்; சிக்கிய 4 பெரிய புள்ளிகள்!

அதில் 1 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப் பட்டுள்ளன. இதுதொடர்பாக ராஜேஸ்வரி(58), அவரது மகன் பாலமுருகன்(37) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதுபற்றிய விசாரணையில், கைதான இருவரும் மெரினா கடற்கரை அருகே உள்ள சத்யா நகரில் இருந்து கஞ்சா வாங்கி வந்துள்ளனர். அவர்கள் ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சாவை மலிவு விலைக்கு வாங்கியுள்ளனர்.

கத்திக்குத்து சண்டையில் சமாதான முயற்சி; குறுக்கே போனவருக்கு நடந்த படு பயங்கரம்!

இந்த மூட்டைகளை அதிகாலை வேளையில் போலீசார் நடமாட்டம் இல்லாத சூழலில், வீட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். அதன்பிறகு அவர்களின் வீட்டிற்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை பார்ட்டி என்ற பெயரில் அழைத்து வந்துள்ளனர்.

அப்போது அவர்களுக்கு கஞ்சா விநியோகம் செய்து வந்துள்ளனர். இதற்காக மாணவர்களிடம் இருந்து ரூ.100, ரூ.200 என்ற அளவில் கட்டணம் வசூல் செய்துள்ளனர்.

செம போதையில் விநாயகர் சிலை முன் இப்படியா ஆடுறது? புடுச்சு உள்ள தூக்கி போட்ட போலீஸ்!

குறைந்த விலை என்பதால், மாணவர்கள் அதிக அளவில் வரத் தொடங்கியுள்ளனர். இதுதொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி